சனி, ஞாயிறு தினங்களில் நாடுமுழுவதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி..!!!
ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில் உள்ள கிராமலகள் தவிர, வார இறுதி நாள்களில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அல்லது தனிமைப்படுத்தல் முடக்கத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
“பொது மக்களை அச்சமடைவதைத் தவிர்க்குமாறு கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயலணி கோருகிறது.
எவ்வாறாயினும் நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்று எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.