Saturday 24 October 2020

யாழ். வாசிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!!

SHARE


யாழ்ப்பாணம் , சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவருக்கும்,  வடமராட்சி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரும் வவுனியா , நெடுங்கேணியில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் . அவரை அண்மையில் சென்று சந்தித்து வந்த அவரது தாய் சாவகச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வவுனியா , நெடுங்கேணியில் வீதித் திருத்தப் பணியில் ஈடுபடுவோர் சிலர் கொரோனாத் தொற்றுடன் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர் . அதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய பலர் பி.சி.ஆர்  பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர் . அந்தப் பரிசோதனை முடிவு களின்படி வீதித் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய பொறியியலாளர் ஒருவருக்குத் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . தொற்றுடன் இனங்காணப்பட்டவரை அவரது தாய் கடந்த 19 ஆம் திகதி சென்று சந்தித்துத் திரும்பியுள்ளார் . வீதி திருத்தப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து , பொறியியலாளரின் தாய் 21 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டார் . தாயுடன் தொடர்புபட்ட 7 க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது .

அதேவேளை , வடமராட்சி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் பொறியியலாளர் கடந்த 13 ஆம் திகதி வீடு வந்து சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படு கின்றது . அவருடன் தொடர்புடைய நபர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர் .

SHARE