Saturday 31 July 2021

இலங்கை அணிக்கு எதிரான தோல்வி! ஏமாற்றமில்லை... வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்

SHARE

இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டியில், இந்தியா தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, இலங்கை அணி 2-1 என்று கைப்பற்றியது.

இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில், இந்த தொடரில் தோல்வி அடைந்தது குறித்து நான் எந்த வித ஏமாற்றம் அடையவில்லை.

இதுபோன்ற மைதானங்களில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்த்து அவர்கள் விளையாடியது சிறந்த அனுபவம். இந்த தொடரின் மூலம் சில பல விடயங்களை அவர்கள் கற்றுக் கொண்டு இருப்பார்கள்.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தான் இளம் வீரர்கள் சிறந்த வீரர்களாக மாறமுடியும். மேலும் இதுபோன்று ஸ்லோ டிராக்கில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதையும் அவர்கள் இந்த சில போட்டிகளின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவது எப்போதுமே அவசியம். அனைத்து போட்டிகளிலுமே எல்லோராலும் ரன்களை குவித்து விடமுடியாது. இளம் வீரர்களுக்கு என்னதான் திறமை இருந்தாலும் அனுபவம் என்பது மிகவும் முக்கியம்.

அதனை இந்த தொடர் மூலம் அவர்கள் அறிந்திருப்பார்கள். இது அவர்களுக்கு நல்ல பாடம், எதிர்வரும் நாட்களில் அவர்கள் சிறந்த வீரர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.

SHARE