கனடாவின் லிட்டன் கிராமம் காட்டுத்தீயால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.
15 நிமிடங்களுக்குள் முழு கிராமமும் தீப்பிடித்ததாக லிட்டன் மேயர் ஜான் போல்டர்மேன் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் .
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
நகரில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .
பல தசாப்தங்களுக்கு பிறகு கனடாவில் அதிவெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் .
மேலும் , கடுமையான வெப்பத்தால் கனடாவில் ஐந்து நாட்களில் 486 பேர் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.