யாழ் நகரின் இன்றைய காட்சி..!!! (Video)


நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்கியுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டமும் முடங்கியுள்ளது.

இன்றைய தினம் சனிக்கிழமை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய செயற்பாடுகள் முடங்கியுள்ளது.

அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் மருந்தகம்,வைத்தியசாலை,எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமையான போல் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

படங்கள்: ஐ.சிவசாந்தன் 




















 

Previous Post Next Post


Put your ad code here