Sunday 1 August 2021

இந்தியாவின் தோல்விக்கு இவர் ஒருவரே முழு பொறுப்பு! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கடும் தாக்கு..!!!

SHARE


இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில், அதற்கு முழு காரணம் ஷிகார் தவான் தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்று இழந்தது. குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்திதது.

இதனால் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் நிதிஷ் ரானா ஆகியோரை கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்த தோல்வி குறித்து தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

அதில், நிறைய பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள இந்திய அணி, பந்து வீச்சு பலத்தை பயன்படுத்தி, முதலில் பந்துவீசி இலங்கையை குறைந்த ஓட்டங்களுக்குள் சுருட்டியிருக்கலாம்.

ஆனால், அதை விடுத்து முதலில் பேட்டிங் ஆடியது பெரிய தவறு. அது கேப்டன் தவானின் மோசமான கேப்டன்சியை காட்டுகிறது. இலங்கை அணி மிக சிறப்பாக பந்துவீசியது, ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிக மோசமான, தவறான ஷாட்கள் அடித்து சொதப்பினர்.

இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களது விக்கெட்டுகளை எளிதாக விட்டுக்கொடுத்தனர் என்றே நான் நினைக்கிறேன். ஹசரங்காவின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சற்று கவனமாக எதிர்கொண்டிருக்க வேண்டும், ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
SHARE