Tuesday 7 December 2021

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்..!!!

SHARE

என்னை வைத்துத்தான் பட வியாபாரம், நான் முடிவு செய்வதுதான் கதை என்று பேசிய ஏராளமான நடிகர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இதுவரை தாங்கள் கேட்ட கதைகள் பற்றி பொது நிகழ்ச்சிகளில் பேசுவதில்லை. கதை பிடிக்கவில்லை என்றால் நாகரிகமாக ஒதுங்கிவிடுவார்கள். அதைப்பற்றி வெளிப்படையாக பேசமாட்டார்கள்.

ஆனால் நடித்த முதல் படம் கூட வெளியாகாத நிலையில், அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நாயகன் பேசிய பேச்சு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘என்ன சொல்லப்போகிறாய்’ படத்தில் நடித்துள்ள அறிமுக நடிகர் அஸ்வின் உச்சக்கட்ட, “கதை கேட்கும்போது அந்தக் கதை பிடிக்காவிட்டால் நான் தூங்கிவிடுவேன். அப்படி இதுவரை 40 கதைகளுக்கு தூங்கியிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.இந்த நிகழ்வில் படத்தின் நாயகனான அஸ்வின் குமார் பேசும்போதுதான் இந்தத் திமிர் பேச்சை வெளிப்படுத்தினார்.

அஸ்வின் குமார் பேசும்போது, ”ரசிகர்களின் அன்பால்தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்புதான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். விஜய் தொலைக்காட்சி என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம் தந்திருக்கிறது. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப் படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன்.

என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது அந்தக் கதை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் சட்டென்று தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இந்த ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதை மட்டும்தான். இயக்குநர் ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார். என்ன சொல்ல போகிறாய்’ படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டாடுவதைக் காண ஆவலாக இருக்கிறேன். இந்தப் படம் பல பேரின் கனவு. கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன்…” என்றார்.

அவரது பேச்சைக்கேட்ட அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். “ஒரு படம் நடிச்சு அதுவும் வெளியாவதற்குள்ளாகவே நல்ல கதை, மோசமான கதை என்று பிரித்துப் பார்க்கும் அளவுக்கு இந்த அஸ்வின் புத்திசாலியா.. அறிவாளியா.. “கதை கேட்கும்போது தூங்கிவிடுவேன்” என்று சொல்வதெல்லாம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களை அவமானப்படுத்துவது போல் இல்லையா.. இது பற்றிக் கிஞ்சித்தும் ஒரு குற்றவுணர்ச்சிகூட இல்லாமல் சின்னப் பையனைப் போல பேசிவிட்டுப் போயிருக்கிறாரே..” என்று கடுமையான விமர்சித்தனர்.

இதே நிகழ்ச்சியில் இவருக்கு அகில இந்திய அளவில் ரசிகர் மன்றங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு.. அதற்காக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

ஆரம்பமே அனர்த்தமா இருக்கே..!?

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வட்டாரத்தில் கேட்ட போது "முளைச்சு மூணு இலை வீடல அதுக்குள் பாரு நாட்டாமைதனத்தை" என்பார்கள் அது மதிரிதான் நடிகர் அஸ்வின் பேச்சு இருக்கிறது என்றவர்கள், ஆடியோ நிகழ்ச்சியில் இவர் பேசிய வீடியோவை பார்த்த தயாரிப்பாளர்கள் இது போன்ற நடிகர்களை வைத்து படம் எடுப்பது தேவையா என யோசிக்க வைத்துள்ளது.

அஸ்வின் நாயகனாக நடிக்க தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அஸ்வின் பேசிய வீடியோவை பார்த்த முன்னணி நிறுவனம் அவரை வைத்து படம் தயாரிக்கும் முடிவை ரத்து செய்துள்ளது. இதேபோன்று படத் தயாரிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு அஸ்வின் பேசிய வீடியோ பதிவை அனுப்பி வருகின்றன. இதனால் அஸ்வினை கதாநாயகனாக்கி படம் தயாரிக்கும் நிறுவனங்கள் படம் தயாரிக்க தயக்கம் காட்டி வருகின்றன” என்கின்றனர்.
SHARE