Saturday 26 March 2022

இந்தியாவில் முதல்முறையாக ரூ.100 கோடிக்கு ஹெலிகொப்டர் வாங்கிய வர்த்தகர்..!!!

SHARE

இந்திய வர்த்தகர் ஒருவர் ஏர்பஸ் எச் 145 ரக ஹெலிகொப்டரை வாங்கியுள்ளார். இந்திய ரூபா மதிப்பில் இந்த ஹெலிகொப்டரின் விலை சுமார் ரூ.100 கோடியாகும்.

இந்தியாவின் மிக முக்கிய வர்த்தகர்களில் ஒருவர் ரவி பிள்ளை, 68. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஆர்பி குரூப்ஸின் சேர்மேனான இவர் நிறுவனத்தின் கீழ் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணி புரிந்து வருகின்றனர். இவரின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இவர் தற்போது இந்தியாவிலே முதல் ஆளாக ஏர்பஸ் எச் 145 ரக ஹெலிகொப்டரை வாங்கியுள்ளார். இந்திய ரூபா மதிப்பில் இந்த ஹெலிகொப்டரின் விலை சுமார் ரூ.100 கோடியாகும்.

உலகிலேயே ஒட்டுமொத்தமாக 1,500 எச் 145 ஹெலிகொப்டர்கள் மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் ஏழு நபர்கள் வரை பயணிக்க முடியும். இது 20 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும்.
SHARE