மோட்டார் சைக்கிள் பற்றரி வெடித்ததில் தந்தை, மகள் உயிரிழப்பு..!!!
மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளின் பற்றரி வெடித்ததில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இந்தியாவின் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் பற்றரியை நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு நித்திரைக்கு சென்றபோது குறித்த பற்றரி வெடித்துச் சிதறியதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க போராடிய 49 வயதான தந்தை மற்றும் அவரது மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.