Saturday 26 March 2022

முகத்தைப் போல பாதங்களையும் பேணுவோம்; சர்க்கரை நோயாளிகளுக்கான ஆலோசனை..!!!

SHARE

தங்­க­ளுக்கு நீரி­ழிவு நோய் இருப்­பதே தெரி­யாமல் பல கோடி மக்கள் இருக்­கின்­றனர்.இந்த சர்க்­கரை நோய் ஆட்­கொண்ட மக்­க­ளுக்கு முக்­கி­ய­மாக வரும் பிரச்­சினை”கால்­களில் ஏற்­படும் புண்” இதை Diabetic foot ulcer என்­கிறோம்.ஏனைய பிற­ருக்கு வரும் பாதப்­புண்­ணுக்கும் ஒரு நீரி­ழிவு நோயா­ளிக்கு வரும் பாதப்­புண்­ணுக்கும் மலைக்கும் மடு­வுக்கும் உரிய வித்­தி­யாசம் உள்­ளது.

காரணம், சரி­யாக இரத்த சர்க்­கரை அள­வு­களை கட்­டுக்குள் வைக்­காத ஒரு நீரி­ழிவு நோயா­ளிக்கு அவ­ருக்கு வந்த புண் சீக்­கிரம் ஆறாது.புண் வந்தால் சரி­யாக ஆறு­வது கடினம் என்று தெரியும். ஆனால், பல­ருக்கு தங்கள் கால்­களில் புண் ஏற்­பட்­டதே பல நாட்கள் தெரி­யாமல் போகவும் வாய்ப்பு இருக்­கி­றது .

எப்­படி?
முற்­றிய நீரி­ழிவு நோய் உள்ள ஒரு­வ­ருக்கு தனது பாதங்­களில் உள்ள நரம்பு மண்­ட­லத்­திற்கு தேவை­யான இரத்த ஓட்டம் சிறு­கச்­சி­றுக நலிந்து குறைந்து முற்­றிலும் நின்று விடு­கி­றது.
இதனால் அவர்­க­ளது பாதங்­களில் உள்ள நரம்­புகள் வலி / தொடுதல்/ வெப்பம் உணரும் தன்­மையை சிறிது சிறி­தாக இழக்­கின்­றன.

முதலில் கால் லேசாக எரிச்சல் எடுக்க ஆரம்­பித்து. காலம் செல்­லச்­செல்ல எரிச்சல் மர­ம­ரப்பு உணர்­வாக மாறி பிறகு உணர்ச்­சி­யற்ற நிலைக்கு சென்று விடும்.
உணர்ச்­சி­யற்ற நிலைக்கு சென்ற பாதங்­க­ளுக்கு உணர்ச்சி ஏற்­ப­டுத்­து­வது தற்­போ­தைய மருத்­துவ வளர்ச்சி கொண்டு இய­லாத காரியம்.

இந்த நிலையைத் தான் Diabetic peripheral neuropathy என்­கிறோம். நீரி­ழிவு நோயா­ளிக்கு வரும் பாத நரம்பு மண்­டல அழற்சி.இப்­ப­டிப்­பட்ட நிலையில் இருக்கும் பலர் நமது குடும்­பங்­க­ளி­லேயே இருப் பர். இதில் பெரிய சேலஞ்ச் என்­ன­வென்றால் இந்­தியா போன்ற அதிக கிரா­மங்கள் உள்ள நாட்டில்.. 4 கோடி நீரி­ழிவு நோயா­ளிகள் கிரா­மங்­களில் தான் வசிக்­கின்­றனர்.

அவர்கள் பெரும்­பாலும் காலுக்கு செருப்பு கூட அணி­யாத பாத­சா­ரி­க­ளாக இருக்­கின்­றனர்.ஆகவே, தங்­களின் கால்­களில் ஆணியோ முள்ளோ தைத்­தாலும் இவர்­க­ளுக்குத் தெரி­யாது.பல நாட்கள் பார்க்­காமல் இருந்­து ­விட்டு , காலில் சீழ் வைத்து துர்­நாற்றம் அடிக்க ஆரம்­பித்­த­வு­டனோ அல்­லது தங்­க­ளது இடுப்பு பகு­தியில் நெறி கட்­டிய பின்­னரோ அல்­லது அந்த புண்ணால் ஏற்­படும் குளிர் காய்ச்சல் எனும் நிலை வந்­த­பி­றகு தான் பல­ருக்கும் அந்த புண் பற்றி தெரிய வரும்.

சில­ரது கால்­களில் இறந்த பிணங்­களை தின்னும் மேகாட்ஸ் எனும் புழுக்கள் மண்­டிக்­கி­டப்­ப­தைக்­கூட காண முடியும்.இப்­படி ஒரு முள் / ஆணி நமது பாதங்­களை தைத்தால் , பாதத்தில் ஊசி போட்­டது போல கிருமி நமது தோலுக்கு கீழ் சென்று பத்­தி­ர­மாக சேர்ந்து விடும், அங்கு பல்­கிப்­பெ­ருகும். சீழ் வைத்து வெளியே வரப்­பார்க்கும்.

அந்த நேரத்தில் சரி­யாக சிகிச்சை எடுத்து அறுவைச் சிகிச்சை செய்து சீழை வெளி­யேற்றி விட்டு கட்­டுகள் போட்டு தகுந்த மருந்து மாத்­திரைகள் எடுத்தால் கால்கள் தப்­பிக்கும்.

இல்­லா­விடில் அந்த கிருமி தன்னை எதிர்க்க ஆள் இல்லை என அடுத்து தசைகள், எலும்­புகள் என ஆதிக்கம் செலுத்தி அழிக்க ஆரம்­பிக்கும்.

சாதா­ரண புண்­ணாக இருக்கும் ஒன்று . முற்­றிய அழு­கிய நிலைக்கு செல்ல சில நாட்கள் போதும்.
இன்னும் அடுத்த நிலை “கேன்க்ரீன்”(gangrene) எனும் இரத்த ஓட்டம் முழு­வதும் பாதிக்­கப்­பட்டு கால் விரலோ மொத்­த­மா­கவோ கறுப்­பாக மாறி­விடும்.

இந்த நிலையில் அந்த விர­லையோ அல்­லது கணுக்­கா­லுக்கு கீழோ நாம் காவு(salvage amputation) கொடுத்­தாக வேண்டும். இல்­லா­விடில் உடல் முழு­வதும் அந்­தக்­கி­ருமி பரவி (septicemia) உயிரை எடுத்து விடும்.
நாளுக்கு நாள் அறுவைச் சிகிச்சை அரங்­குக்கு ஒரு விரல் எடுக்க . கால் எடுக்க என அனு­ம­திக்­கப்­படும் நீரி­ழிவு நோயா­ளிகள் எண்­ணிக்கை அதி­க­மா­கிக்­கொண்டே தான் செல்­கி­றது.

எனவே, இது போன்ற புண்­களை வராமல் பார்த்துக் கொள்ள சில பரிந்­து­ரை­களை நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு வழங்­கு­கிறேன் :
1. தினமும் உறங்கச் செல்லும் முன் கால்­களை சோப் போட்டு சுத்­த­மாக கழுவ வேண்டும்.
2. நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் அமர்ந்து உங்கள் கால்­களை முக்­கி­ய­மாக பாதங்­களை ஒரு முகம் பார்க்கும் கண்­ணாடி கொண்டு நன்கு பரி­சோ­திக்க வேண்டும். புதி­தாக ஏதேனும் பாத­வெ­டிப்­புகள்/ புண்கள்/ முள் குத்­திய தடம் ஏதும் இருக்­கி­றதா? என்று பார்க்க வேண்டும். (INSPECTION)
3.அடுத்து உங்­களின் விரல்­களைக் கொண்டு பாதங்­களை அழுத்­திப்­பார்க்க வேண்டும். பல நேரம் முள் குத்­திய காயம் வலியே இருக்­காது. ஆனால் அந்த இடத்தில் அழுத்­தினால் வலி தெரியும். (PALPATION) அப்­படி வலி தெரிந்தால் உடனே அடுத்த நாள் காலை மருத்­து­வரை நாட வேண்டும்.
3. வாரம் ஒரு முறை கட்­டாயம் கால் நகங்­களை வெட்ட வேண்டும். நகங்­களை வெட்டும் போது தோலோடு ஒட்ட வெட்­டக்­கூ­டாது. அப்­படி வெட்டும் போது தெரி­யாமல் புண் ஏற்­ப­டுத்த வாய்ப்பு உண்டு
4. பித்த வெடிப்­புகள் இருந்தால் தேங்காய் எண்ணெய் / நீரி­ழிவு நோயா­ளிகள் பாதங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டிய மாய்ஸ்ச்­ச­ரைசர் க்ர்ம்களை தட­வலாம்.

கால் பாதங்கள் வற­வற­வென்று இருப்­பதை தவிர்க்க வேண்டும்.
5.கால் விரல்­க­ளுக்கு இடுக்கில் இருக்கும் தண்­ணீரை சுத்­த­மாக துடைத்து விட வேண்டும். கால்கள் தண்­ணீரில் எப்­போதும் படு­மாறு வேலை செய்­ப­வர்­க­ளுக்கு சேற்­றுப்புண் எனும் பூஞ்சை தொற்று ஏற்­ப­டலாம். ஆகவே, அவர்கள் தினமும் கால் விரல்­க­ளுக்கு இடுக்கில் உள்ள இடங்­களில் சேற்­றுப்புண் (Athletes foot) இருக்­கி­றதா? என்று பார்த்து இருந்தால் அதற்­கு­ரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.
6. பொது­வாக நீரி­ழிவு நோயா­ளிகள் அனை­வரும் 50 வய­தைத்­தாண்­டி­ய­வர்­களாக இருப்­பதால் கிட்­டப்­ பார்வை சரி­யாக இல்­லாமல் இருக்­கலாம். ஆகவே, அதற்­கு­ரிய லென்ஸ் கொண்டு பாதங்­களை பார்க்­கலாம்
7. கால் பாதங்­களில் புண் ஏற்­பட்டால் போர்க்­கால நட­வ­டிக்­கையில் சிகிச்சை எடுக்க வேண்டும். கட்­டாயம் கட்டுப் போடப்­பட வேண்டும். கட்டுப் போடாமல் வெறும் காலில் புண்­ணோடு நடப்­பது தவறு. மருத்­துவ சிகிச்சை எடுக்க வேண்டும். தேவைப்­பட்டால்
மருத்­து­வ­ம­னையில் தங்­கியும் சிகிச்சை எடுக்க வேண்டும்.
8. நீரி­ழிவு நோயா­ளிகள் வெளியே எங்கு சென்­றாலும் கட்­டாயம் செருப்பு அணி­யாமல் செல்­லக்­கூ­டாது.
கால­ணிகள் மிகவும் முக்­கி­ய­மா­னவை.

நியூ­ரோ­பதி வந்­த­வர்கள் MCR சப்பல் எனும் கால­ணி­களை வாங்கி அணி­யலாம். குளிர் காலத்தில் வீட்டில் இருந்தால் கால்­களில் சாக்ஸ் அணி­யலாம். வெளியே ஷூக்கள் அணிந்து செல்­லலாம். முட்கள் அதிகம் இருக்கும் பகு­தி ­களில் வசிப்­ப­வர்கள் ஷூக்கள் அணிந்து வெளியே செல்­வது சிறந்­தது.
காலை வாக்கிங் செல்­ப­வர்கள் – ஷூ அணி­யாமல் செல்­லக்­கூ­டாது.

முக்­கி­ய­மான பரிந்­துரை
நீரி­ழிவை கட்­டுக்குள் வைக்க வேண்டும். இரத்த சர்க்­கரை அள­வு­ களை வீட்­டி­லேயே க்ளூக்­கோ­மீட்டர் கொண்டு சோதித்து பார்க்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவுகளை சரியாக பராமரித்தால் இந்த நியூரோபதி வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மருத்துவரிடம் சரியாக காண்பித்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்குரிய மருந்துகளை சரியாக எடுக்க வேண்டும்.முகத்தை அழகாக தினமும் கண்ணாடியைப் பார்த்து பராமரிப்பதை விட, பல மடங்கு கவனமாக நமது பாதங்களை பராமரிக்க வேண்டும்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
SHARE