தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மதுபானசாலை உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news