திறப்பு விழாவின்போது இடிந்து விழுந்த பாலம்..!!! (VIDEO)
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவின்போது இடிந்து விழுந்தது.
மழை காலங்களில் ஆற்றை கடப்பதற்காக கட்டப்பட்ட பாலம் அவ்வப்போது வெள்ளத்தில் சேதமடைந்துள்ள நிலையில், புதிய பாலம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி அந்தப் பாலத்தை திறந்ததும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதனால் அதிகாரிகள் அனைவரும் நிலை தடுமாறி விழுந்தனர்.
உடைந்த பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காயமின்றி மீட்கப்பட்டனர்.