யாழ்ப்பாணத்தில் சீ தமிழின் சரிகமப சீனியர் குரல் தேர்வு..!!!


தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியான சீ தமிழின் சரிகமப சீனியர் 4 பாடல் நிகழ்ச்சிக்கான முதல் கட்ட குரல் தேர்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

நாளை வியாழக்கிழமை(28) யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் காலை 10 மணி முதல் இந்த தேர்வு நடைபெறவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த குரல் தேர்வில் பங்கேற்க முடியும்.

கடந்த வருடம் சீ தமிழ் சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தில் இருந்து கில்மிஷா, அசானி ஆகியோர் பங்கேற்றனர்.
Previous Post Next Post


Put your ad code here