Wednesday, 4 October 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!



லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய 3470 விலை ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!

யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.















இன்றைய ராசிபலன் - 04.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 04.10.2023..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் அதிக ஈடுபாடு இருக்கும். ஒரு வேலையை பொறுப்பாக செய்து முடிப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுற்றி இருப்பவர்களிடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். அதாவது ஃபிரண்டுடன் சினிமா பார்க்க செல்வது, பீச், பார்க் செல்வது என்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் கையில் இருக்கும் பணம் கொஞ்சம் செலவும் ஆகத்தான் செய்யும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. அதையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. சொந்த தொழிலில் புதிய ஆட்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்தவர்களை எக்காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. அடுத்தவர்கள் மீது பழி போடும் போது உங்களுக்கு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்ற படி வேலை செய்யும் இடம் சொந்த தொழிலில் எதிர்பார்த்த நல்லது நடக்கும். பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை அதிகம் செலவு செய்வீர்கள். அதனால் அலுவலக வேலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். சொந்த தொழிலில் கவனக்குறைவு காரணமாக சிலர் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க பெரிய நஷ்டம் இருக்காது. அனுபவரீதியாக நிறைய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். என்னதான் கேலியும் கிண்டலும் சேர்ந்து நாள் நகர்ந்தாலும் உங்களுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்களை பற்றி உங்கள் ஊர், உங்கள் தெருவே பேசக்கூட வாய்ப்புகள் உள்ளது. அந்த அளவுக்கு உங்களுடைய எண்ணங்களும் செயல்பாடும் உயர்வாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே பெயர் புகழ் பதவி உங்களை தேடி வரும் பாருங்க. கணவன் மனைவிக்கிடையே சண்டை வர வாய்ப்பு உள்ளது. வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். எந்த வேலையிலும் மனசு ஈடுபடாது. கொஞ்ச நேரம் கண்களை மூடி தூங்கலாம் என்று மனசு சொல்லும். ஆனால் வேலை பளு தூங்கவிடாமல் தடுக்கும். இப்படி சின்ன சின்ன தடுமாற்றம் இருப்பதால் சின்ன சின்ன தோல்விகளும் இருக்கும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். வாய்ப்பு கிடைத்தால் லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தூங்கி ஓய்வு எடுக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது. உணர்ச்சிவசப்பட்டு யாரையும் திட்டவும் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக சென்றால் பிரச்சனை இல்லை. வாக்குவாதம் செய்வதன் மூலம் உங்கள் மனசு தான் கஷ்டப்படும். மற்றபடி செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளை போராடி ஜெயிக்கவே சரியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன எதிரிகள், சொந்த தொழிலில் போட்டியாளர்கள் என்று எல்லோரும் உங்களை விரட்டுவார்கள். வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் கூட சண்டை போடுவார்கள் என்றால் பாருங்கள். அந்த அளவுக்கு நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். வேறு வழி கிடையாது. எதிரிகளை எப்படியாவது சமயத்தில் கொள்ளுங்கள். எதிர்த்து சண்டை மட்டும் போடாதீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகமாக இருக்கும். அதே சமயம் செலவும் அதிகமாக இருக்கும். வந்த சம்பளத்தை பத்திரமா வச்சுக்கோங்க. மாத கடைசி வரை அதை வைத்து தான் ஓட்ட வேண்டும். யார் யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக பணத்தை வாரி இறைக்காதீங்க. புத்தி மயங்கி போக வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபர் பேச்சை முழுசாக நம்பினால் நஷ்டம் உங்களுக்கே.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் வந்த சிக்கல் வந்த வழி தெரியாமல் உடனே சரியாகிவிடும். கவலைப்படாதீங்க கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. இன்று வெளியே செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு சென்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். மனதை சரி செய்ய கொஞ்ச நேரம் உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள். அப்படி இல்லை என்றால் கோவிலுக்கு செல்லுங்கள். வேலை பளு அதிகமாக உள்ள சமயத்தில் முன்கோபம் வரும். உடன் பணிபுரிபவர்களிடம் சண்டை போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை விவசாயிகளுக்கு இந்த நாள் முன்னேற்றத்தை தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த உடல்நிலை பிரச்சினை இன்று சரியாகும். எப்போதும் போல வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்த நல்லது நடக்கும். வாரா கடன் வசூலாகும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். வீன் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.

Tuesday, 3 October 2023

இந்த வார ராசிபலன் 02.10.2023 முதல் 08.10.2023 வரை..!!!

இந்த வார ராசிபலன் 02.10.2023 முதல் 08.10.2023 வரை..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்பம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பண வரவு எதிர்பார்த்த படி இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். உடல் நலம் சீராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதேபோல் குடும்பத்தில் தங்களுக்கு என்று வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

வேலையை பொறுத்தவரை எப்போதும் போல் வழக்கமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். அலுவலக ரீதியாக வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்காது. மறைமுக எதிரிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் எடுப்பதை இந்த வாரம் தள்ளி வைப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. அதிக அளவு செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து முடித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் வீட்டில் நடைபெறும். பயணங்களால் லாபம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வேலையை பொறுத்தவரை புதிதாக வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு திடீர் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இருப்பினும் திட்டம் தீட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். மூன்றாவது நபர் தலையிடுவதை தவிர்த்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் சற்று காலதாமதமாக வெற்றி கிடைக்கும்.

வேலையை பொறுத்தவரை பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விற்பனையில் லாபம் அதிகமாகவே இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. வீண்விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஆதலால் பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து எடுப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

வேலையை பொறுத்தவரை பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றமும் ஏற்படக்கூடும். வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சிக்குரிய முதலீடுகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதியை வழிபட வேண்டும்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றியடையும் வாரமாக திகழப் போகிறது. வருமானத்திற்கு எந்த வித குறைவும் இருக்காது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல வகைகளில் பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.

வேலையை பொறுத்தவரை பணி சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். அதனால் பல சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் இருக்காது. என்றாலும் நஷ்டமாகாமல் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தொடங்க ஆரம்பிக்க சிறந்த வாரமாக இந்த வாரம் இருக்கும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாலை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகளை சமாளிக்க கூடிய வாரமாக திகழப்போகிறது. பணவரவை பொருத்தவரை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்திய தனத்தால் சரி செய்து விடுவீர்கள். பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. அத்யாவசிய பயணத்தை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்து இருந்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. செயல்திறன் அதிகரிக்க கூடிய வாரமாக திகழப் போகிறது.

வேலையை பொறுத்தவரை கடினமாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைப்பது சிரமம் தான். இருப்பினும் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு முடிவெடுக்க வேண்டும். லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விலகிய உறவுகள் விரும்பி வந்து சேரும் வாரமாக திகழப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி அன்போடு அன்யோன்யம் ஏற்படும். வரவிற்கு ஏற்ற செலவு ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தவறாக புரிந்து கொண்ட அனைவரும் விரும்பி வந்து தங்களை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உயர் அதிகாரிகளின் ஆதரவால் அலுவலகத்தில் பல நல்ல நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலாற்றுவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடன் இருப்பவர்களுடன் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வைஷ்ணவி தேவியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாரமாக திகழப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை இருவரும் பேசி சுமுகமாக முடித்து வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும் அதற்காக கடன் வாங்குவதை சமாளித்து விடுவீர்கள். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுத்து நன்மை அடைவீர்கள்.

வேலையை பொறுத்தவரை உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு அதிகமாக கிடைக்கும். இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமாகவும், நிதானமாகவும் பேச வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்க்க லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வியாபாரத்தை முன்னேற்ற என்ன செய்யலாம் என்ற யோசனை மனதிற்குள் அதிகரிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு செயலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன் தீவிரமாக யோசித்து செயலாற்றினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் சற்று அதிகமாகவே உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்க்காத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் சாதகமான சூழ்நிலையில் இல்லை. எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்குரிய சாதகமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தங்கள் உடல் நலனில் மட்டுமில்லாமல் குடும்பத்தாரின் உடல் நிலையிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

வேலையை பொறுத்தவரை பணி சுமை சற்று அதிகமாகவே இருந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வேலை எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்துடன் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட சற்று அதிகமாகவே லாபம் கிடைக்கும். வியாபாரத்தை பற்றி இதுவரை இருந்து வந்த கவலை நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாரமாக திகழப் போகிறது. இதுவரை ஏற்பட்டிருந்த தேவையில்லாத செலவுகள் குறைவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் சேமிப்பு என்பது ஏற்படும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுத்தால் அது சாதகமாக இருக்கும். வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை அதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் ஆகியவை கிடைக்கவும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரம் நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல ஆரம்பிக்க போகிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதற்கு தீவிரமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும் கூடிய வாரமாக திகழப் போகிறது, எதிர்பார்த்த வருமானத்தை விட கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சில சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சுப செய்தி விரைவிலேயே கிடைக்கும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் அலட்சியப் போக்கை தவிர்த்து கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் தென்படும். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட அதிகமாகவே கிடைக்கும். எந்த அளவுக்கு அதிகமாக கிடைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதனால் வியாபாரத்தை மேலும் விரிவாக்க முயற்சிப்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.

அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.

அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர். அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.

இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் , தமது காணிகளுக்குள் ஊடுருவும் திருடர்களை கட்டுப்படுத்தும் முகமாக தமது காணிகளை சுற்றி வேலி அடைத்து , அக்காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை அடுத்து அப்பகுதியில் தமது காணிகளை சுற்றி வேலி அடைக்க பிரதேச செயலர் அனுமதி அளித்துள்ளார்.

அதேவேளை 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த மாங்கொல்லை வைரவர் ஆலய திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்..!!!

சனி பெயர்ச்சி பலன் 2023; 30 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் கோடீஸ்வர யோகம்..!!!


ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்ற முதுமொழி ஒன்றும் உண்டு.

சனி பகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

அந்தவகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவானால் 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு பதவி பட்டம், கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார்.

அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார்? அதேபோல 12 ராசிகளிலும் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என பார்க்கலாம்.

மேஷம்:

லாப சனி மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம்.

அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

ரிஷபம்:

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனியால் சச யோகம் செயல்படும். இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புது பதவி கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.

புதிய கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

மிதுனம்:

அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் இது தர்ம சனி காலம். பதவியில் உயர்வு புரமோசன் கிடைக்கும். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். கோடி கோடியாக கொட்டித்தரப்போகிறார் சனி பகவான்.

கடகம்:

எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும்.

வரக்கூடிய பணத்தை கவனமாக கையாளுங்கள். பேராசை பெரு நஷ்டமாகிவிடும்.

சிம்மம்:

உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனியால் மிகப்பெரிய சச யோகம் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வரப்போகிறது. வீண் செலவுகளை தவிர்த்தால் சேமிக்கலாம்.

கன்னி:

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

துலாம்:

உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இனி வளர்ச்சிதான். ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரப்போகிறார்.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் சச யோகம் தேடி வரப்போகிறது. இனி உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆசைகளை குறிக்கோள்களை சனி பகவான் நிறைவேற்றுவார்.

விருச்சிக ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது.

தனுசு:

ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கப்போகிறது. காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது. கோடி கோடியாக வரப்போகும் செல்வத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

மகரம்:

ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.

எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். நிதானமாக அடி எடுத்து வைப்பது அவசியம்.

கும்பம்:

சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு அதிகரிக்கும். குருவின் பயணம் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். 2024ஆம் ஆண்டு முதல் பண விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.

மீனம்:

ஏழரை சனி ஆரம்பம் என்பதால் எதிலும் கவனமும் நிதானமும் தேவைப்படும். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார்.

அரசியல்வாதிகளுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இரண்டரை ஆண்டுகளுக்கு பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!

யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில், மரம் முறிந்து விழுந்தமையால் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைபட்டு இருந்ததுடன் , நகருக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர் பகுதியில் நின்ற சுமார் 200 வருட காலத்திற்கு மேற்பட்ட வேப்ப மரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது.

அதனால் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் மின்சார வயர்களுக்கும் மேலும் மர கிளைகள் விழுந்தமையால் , மின்சார கம்பங்கள் முறிவடைந்ததுடன் , நகர் பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டது.

அத்துடன் மரத்திற்கு கீழ் இருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு டிக்கெட் விற்கும் கடையும் சேதமடைந்ததுடன் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

சாவகச்சேரி நகர சபை , இலங்கை மின்சார சபையினர், நகர் பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதுடன் , வீதி ஊடான போக்குவரத்தை சீர் செய்தனர்.





யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்..!!!

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்குவதாக கூறி தங்கச் சங்கிலியை அபகரித்து சென்ற இளைஞர்..!!!

‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்குவதாக கூறி தங்கச் சங்கிலியை அபகரித்து சென்ற இளைஞர்..!!!


திருகோணமலை நகரில் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறீன் வீதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் ‘சப்ரைஸ் கிஃப்ட்’ கொடுக்கவந்துள்ளதாகக் கூறி பாசாங்கு செய்து வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர் மூதாட்டி அணிந்திருந்த ஐந்து பவுண் தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.

இலக்கத்தகடு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரே இவ்வாறு தங்கச்சங்கிலியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுகப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நண்பர்கள் உறவினர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு தெரியாத நபர்கள் மூலம் ‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்கும் போக்கு அதிகரித்து வருகிற நிலையில் அதனை பயன்படுத்தி இவ்வாறான அபகரிப்பு சம்பவங்களும் அங்காங்கே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்த நிலையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!!!

யாழில் குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்த நிலையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!!!



யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தாய் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளது.

அவர் தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய ராசிபலன் - 03.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 03.10.2023..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரும் நாளாக அமையும். சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்ய வங்கிகளின் கடனை முயற்சி செய்யலாம். சுலபமாக கடன் தொகை கிடைக்கும். மாமியார் வீட்டு உறவுகளோடு கொஞ்சம் கவனமாக இருங்கள். சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இருவரும் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷராக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் உங்கள் கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். மற்றபடி தினசரி வேலையை ஆர்வத்தோடு செய்யும்போது வெற்றி நிச்சயம். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். இன்று மாலை நடக்கக்கூடிய நல்ல நிகழ்ச்சி உங்களுடைய வீட்டில் குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று பேசும் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு அனாவசியமாக வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அடுத்தவர்களுக்கு நல்லது செய்வதாகவே இருந்தாலும் சொல்லாதீங்க. அதை செஞ்சிடுங்க. அதுதான் நன்மையை தரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிடிவாத குணத்தை விட்டுக் கொடுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. உங்களுடைய முன்கோபத்தாலும் சண்டையாலும் குடும்பத்தின் நிம்மதி இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவுகளை விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரணியாக பேசவும். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள பார்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் உண்டு. நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். விவசாயிகளுக்கு இது நல்ல முன்னேற்றம் தரும் நாள். கமிஷன் தொழில் செய்பவர்கள் தங்களுடைய வேலையில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும். முன்பின் தெரியாதவர்களுக்கு எந்த வேலையும் நடத்திக் கொடுக்காதீங்க.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக தான் அமையும். ஆனாலும் அடுத்தவர்கள் உங்களுடைய மனதை காயப்படுத்தும் படி சில சம்பவங்கள் நடக்கும். அதனால் பிரச்சனை இருக்காது. ரொம்பவும் பிடித்தவர்கள் உங்களை வெறுக்கும் படியான சூழ்நிலை ஏற்படும். ஆனால் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சனை சரியாகிவிடும். இன்று நடக்கக்கூடிய பிரச்சனையை மனதில் போட்டு குழப்பிக்காதீங்க ஃப்ரீயா விடுங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இத்தனை நாள் செய்யாமல் போட்டு வைத்த வேலைகளை கூட இன்று சுறுசுறுப்பாக செய்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ரோட்டு கடையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இத்தனை நாள் இல்லாத பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு வெற்றி பக்கத்தில் தான் இருக்கிறது. விடா முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று அழகு நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் முகத்தை நீங்களே கண்ணாடியில் பார்த்து பெருமிதம் அடைந்து கொள்வீர்கள். உற்சாகமாக வேலையை செய்வீர்கள். உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உற்சாகத்தோடு மாறும் அளவுக்கு உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரியும். அழகும் அறிவும் சேர்ந்து இன்று உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சந்தோஷமான இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்லலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பாராட்டும் புகழும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் செய்த வேலைக்கு உண்டான பலனை கடவுள் கொடுக்கப் போகின்றார். உங்களுடைய கஷ்டத்திற்கு இன்று நிச்சயம் பலன் கிடைக்கும். அது எந்த வகையில் வேண்டும் என்றாலும் உங்களை வந்து சேரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். குழந்தைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சி வெற்றியைத் தரும். புதுசா இன்டர்வியூக்கு போன, அதில் நிச்சயம் சக்சஸ் தான். குலதெய்வத்தை நினைத்து விட்டு புது முயற்சியை மேற்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். இன்று மாலை கோவிலுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகளும் உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் சரியாகிவிடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அடுத்தவர்களுடைய உணர்ச்சிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தன்னுடைய சுயநலத்திற்காகவே யோசித்து செயல்படுவது ரொம்ப ரொம்ப தவறு. மனைவி குழந்தைகளோடு சேர்த்து பெற்றோரையும் அக்கறையாக பார்த்துக் கொள்வதன் மூலம் நிம்மதி அடையலாம். செய்யும் தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. குறுக்கு வழியில் போகாதீங்க. அரசாங்கத்தை எதிர்த்து இல்லிகளாக எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வேலையை சரிவர செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். ஓய்வு எடுக்கும் படி மனசு சொல்லும். சில பேருக்கு கொட்டாவி வந்து கொண்டே இருக்கும். இந்த சோம்பேறித்தனமான நாளை சுறுசுறுப்பாக நகர்த்திச் செல்ல நீங்கள் புத்துணர்ச்சியாக உங்களுக்கு பிடித்த பாடல், பிடித்த விஷயங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்த்துக் கொண்டே இருங்கள். அப்போதுதான் மனசு சுறுசுறுப்பாக இருக்கும். சோம்பேறித்தனமான இந்த நாளை நகத்தைச் செல்வதில் சில சிரமங்கள் இருக்கும் ஜாக்கிரதை.

Monday, 2 October 2023

யாழ். பாடசாலையில் சக மாணவனுக்கு சொக்லேட் கொடுத்த மாணவி! அண்ணன் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்..!!!

யாழ். பாடசாலையில் சக மாணவனுக்கு சொக்லேட் கொடுத்த மாணவி! அண்ணன் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்..!!!


யாழில் மாணவ சிறுமி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன்,மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லெட் வழங்கியுள்ளார். அவர் 14வயதுடைய மேற்படி தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் சொக்லெட் வழங்கியுள்ளார்.

இதையடுத்தே எதற்காக சொக்லெட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17வயதுடைய அண்ணன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவியின் அண்ணனின் தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
யாழில் வாள் வெட்டு - இளைஞன் படுகாயம்..!!!

யாழில் வாள் வெட்டு - இளைஞன் படுகாயம்..!!!


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை பட்டா ரக வாகனத்தில் வந்த வன்முறை கும்பல் ஒன்று வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பிக்க , இளைஞன் முச்சக்கர வண்டியை கைவிட்டு வீதியில் ஓடிய போதிலும் , துரத்தி துரத்தி வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

வீதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிக்கப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

நுணாவிலில் பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றின் உரிமையாளரான கிளிநொச்சி , பளை பகுதியை சேர்ந்த பராமநாதன் ஜோதீஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவர் எனவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைய ராசிபலன் - 02.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 02.10.2023..!!!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தர்ம சங்கடமான சூழ்நிலை நிலவும். யாராவது உங்களிடம் காசு வந்து கேட்பாங்க. ஆனா, அதை கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதை உங்களால் பூர்த்தி செய்ய முடியாது. இப்படி சில சங்கடங்களை எதிர்கொள்ளும்போது, சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சொந்த தொழிலில் லாபமும் வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். வாரத்தின் தொடக்க நாளே சுறுசுறுப்பாக தொடங்கும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் பாராட்டும் கிடைக்கும். சொந்த தொழிலை விரிவுபடுத்த புதிய முதலீடு கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த நாள் இனிமையாக நகர்ந்து செல்லும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கொஞ்சம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க வேண்டும். பிள்ளைகள், மனைவி, இவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள். ஒரேடியாக வேலையில் உங்களுடைய கவனத்தை செலுத்தினால் மன அழுத்தம் தான் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் குடும்ப உறவினர்களுடன் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்துக்கு இரண்டு நாள் லீவு போட்டு குடும்பத்தோடு வெளியூர் பயணம் செய்து ரிலாக்ஸ் செய்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளும் சரியாக நடக்கும். நீங்கள் பிளான் பண்ண படி, முயற்சிகளில் வெற்றி அடையப் போகிறீர்கள். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்குது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் நாளாக அமையும். ரோட்டு கடை வியாபாரிகளுக்கு எதிர்பாராத பெரிய வியாபாரம் கிடைக்கும். பண வரவால் மனது பெருமிதம் கொள்ளும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியம் எல்லாம் சுகமாக முடியும். வீட்டில் தடைபட்டு வந்த நல்ல காரியம் பேச்சுக்களை மீண்டும் பேச தொடங்க விடுவீர்கள். புரட்டாசி மாதம் முடிந்ததும் கெட்டிமேல சத்தம் கேட்கும். குழந்தை பாக்கியம் வேண்டி எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி எட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புது சிந்தனை உயர்ந்த இடத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சிரமமான வேலையை கூட சுலபமாக முடிப்பீங்க. வராத கடன் வசூலாகும். தெரிந்தவர்கள் மூலமாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் வெற்றியை கொடுக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மறை சிந்தனை அதிகமாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையையும், பிரச்சனையாக பார்க்க மாட்டீங்க. அது உங்களுக்கான அனுபவப்பாடம் என்று ஏற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வாழ்க்கைத் துணையிடம் பணத்தைப் பற்றி பேசக்கூடாது. முன்கோபத்தை குறைத்து விட்டு கொடுத்து செல்வது குடும்பத்தில் நிம்மதியை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுக்கான நாளாக இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கொஞ்சம் கரையும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இதனால் அலுவலக வேலையை ஒழுங்காக செய்ய முடியாது. அலுவலகத்துக்கு போக முடியாது. மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்க வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியம், நஷ்டத்தை உண்டு பண்ணிவிடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். குறிப்பாக மாமியார் வழி உறவுகளின் மூலம் ஆதாயம் உண்டு. உங்களை தவறாக நினைத்துக் கொண்ட உறவுகள், இன்று சரியாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். அங்காளி பங்காளிகளுடன் சேர்ந்து நேரத்தை கழிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போடுங்கள். முன்கோபம் பட வேண்டாம். உறவுகளாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். அடம் பிடிக்கக்கூடாது. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒற்றைக்காலில் நிக்காதீங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றம் இருக்கப் போகின்றது. எதிர்ப்பாலின நட்பு கூடாது. ஆதரவாக பேசுகிறார்கள், என்று நம்பி உங்களுடைய அந்தரங்க விஷயங்களை வெளியே நிச்சயம் சொல்லக்கூடாது. புது நண்பர்களுடன் பழகாதீங்க. தேன் ஒழுக்க பேசி, ஏமாற்றி விடுவார்கள். இன்று அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்த்து உஷாராக இருந்துகோங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நியாயமற்ற நிறைய விஷயங்கள் கண்முன்னே தெரியும். புரட்சி செய்ய வேண்டும் என்று மனசு சொல்லும். ஆனால் சூழ்நிலை உங்களை எதையுமே செய்ய விடாது. உணர்ச்சிவசப்படாதீங்க. நிதானத்தோடு இருந்தால் நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையில் கவனத்தோடு இருந்தால் பிரச்சனை இல்லை.

Sunday, 1 October 2023

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!!!

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!!!


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதி ஒன்றில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (01-09-2023) காலை நந்திக்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய தர்மராசா நிசாந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் இன்றையதினம் அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு முன்னாள் உள்ள நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!


எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது.

அதன்படி 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்று 4 ரூபாயினால் அதிகரித்து 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 351 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒன்றின் விலை 62 ரூபாயினால் அதிகரித்து 421 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை லீற்றர் ஒன்றுக்கு 11 ரூபாயினால் அதிகரித்து 242 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு..!!!

கிளிநொச்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு..!!!


கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். இந்த சிறுவர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது

பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை வறுமை உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 2765 க்கு மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இவ்வாறு போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதாவது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1288 சிறுவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 884 சிறுவர்களும் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 393 சிறுவர்களும் இவ்வாறு போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் மூலம் அறிய முடிந்துள்ளது.
இன்றைய ராசிபலன் - 01.10.2023..!!!

இன்றைய ராசிபலன் - 01.10.2023..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சவுகரியமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தபடி எல்லா வேலைகளும் நல்லபடியாக நடக்கும். வீட்டில் பிள்ளைகள் விடுமுறையில் இருப்பார்கள். அவர்களுடைய ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நீங்க உதவி செய்வீர்கள். மனநிறைவோடு இன்றைய நாள் கடந்து செல்லும். ஞாயிற்றுக்கிழமை அல்லவா. குடும்பத்தோடு நேரத்தை கழிப்பதில் ரொம்ப சந்தோஷம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். காலை கண்விழித்து காபி குடிப்பது முதல், இரவு தூங்கும் வரை குடும்பத்தோடு நேரத்தை சந்தோஷமாக செலவழிப்பீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல விளையாட்டு நல்ல பொழுதுபோக்கு, என்று நாள் மெல்லமாக நகர்ந்து செல்லும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு என்று கொஞ்சம் வேலைகள் இருக்கும். விடுமுறை நாளாக இருந்தாலும் உங்களால் ஓய்வு எடுக்க முடியாது. கொஞ்சம் சிரமப்பட்டு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து விட்டால் திங்கட்கிழமை நலம் பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள். வயிறு உபாதைகளை தவிர்க்க காரத்தை குறைத்து சாப்பிடுவது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பிசியான நாளாக இருக்கும். ஓய்வு எடுக்க நேரமே இருக்காது. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை யாராவது ஒருத்தர் உங்க கூடவே இருந்து உங்களை தூங்க விடாமல் செய்வார்கள். குடும்பத்தோடு இன்று மாலை நேரத்தில் வெளியே செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷத்திற்கு எந்த குறைபாடும் வராது. இருந்தாலும் இந்த நாள் இறுதியில் அசந்து போவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகம் வரும். எந்த வேலையை தொட்டாலும் அதில் பின்னடைவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொந்த பந்தங்கள் இவர்களின் மூலம் பிக்கல் பிடுங்கள் ஏற்படும். மன நிம்மதியை இழக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மன நிம்மதி தேவை என்றால், அடுத்தவர்களை அட்ஜஸ்ட் செய்து போவது தான் ஒரே வழி. பிடிவாத குணத்தை விட்டுக் கொடுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடனை கூட, கைநீட்டி வாங்கியவரே வீடு தேடிக் கொண்டு வந்து கையில் கொடுக்கும் அளவுக்கு நல்லது நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை இன்று தாராளமாக மேற்கொள்ளலாம். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்றாக பசி எடுக்கும். நன்றாக தூக்கம் வரும். ஆரோக்கியமான சாப்பாடு அமைதியான தூக்கமும் இந்த ஞாயிற்றுக்கிழமையை சிறப்பாக மாற்றும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முதலீடு செய்ய ஏற்ற நாள். ரியல் எஸ்டேட் சொந்த தொழில் செய்பவர்கள் தங்களுடைய முதலீட்டை விரிவுபடுத்தலாம். முதலீட்டை விரிவு படுத்துவதற்கு தேவையான கடன் உதவிகளை முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசியில் இருந்து சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மேலதிகாரிகளை பற்றி சக ஊழியர்களிடம் புறம் பேசுதல் வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு இட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சம்பள உயர்வோடு இடமாற்றம் வந்தால் அதை ஏற்றுக் கொள்வது நல்லது. நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வீண் செலவுகள் அதிகரிக்கும். வந்த சம்பளம் எல்லாம் கரைந்தது போல ஒரு உணர்வு ஏற்படும். சுபகாரிய செலவும் கூட சேர்ந்து விடும். செலவை சமாளிக்க கையில் இருக்கும் சம்பள பணம் எல்லாம் போதாது. பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவது நல்லது. மற்றபடி பிரச்சினைகள் இல்லாத இன்றைய நாள் நிம்மதியாக நகர்ந்து செல்லும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாட்களாக செய்யாத வேலைகளை இன்று செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். காலையிலேயே சமைத்து முடித்துவிட்டு வீட்டை அழகுப்படுத்தி மன நிம்மதியை பெறுவீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு அல்லது ஹோட்டலுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க வாய்ப்புகள் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த மன தைரியத்தோடு செயல்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அதனால் சில எதிர்ப்புகள் ஏற்படும். சில சிக்கல்கள் ஏற்படும். இருப்பினும் அதையெல்லாம் சமாளிக்க தன்னம்பிகையும் தைரியமும் உங்களுக்கு கை கொடுக்கும். எதுவாக இருந்தாலும் குறுக்கு வழியில் யோசிக்க கூடாது. நேர்வழியில் சென்றால் பிரச்சனை இல்லை அதிகமாக கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் பிசியான நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை தான், இருந்தாலும் தொலைபேசி மூலம் கான் கால் போட்டு, தொல்லை கொடுக்க ஒரு கூட்டம், விடுமுறை நாட்களிலும் மீட்டிங் போட ஒரு கூட்டம், என்று உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். குடும்பத்திற்காக நேரத்தை செலவழிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். என்ன செய்வது வேலை முக்கியம் தானே. ஆகவே இந்த ஞாயிற்றுக்கிழமையை வேலை நாளாக கழித்து என்ஜாய் பண்ணுங்க.