Showing posts with label Medical. Show all posts
Showing posts with label Medical. Show all posts
Sunday, July 3, 2022
Sunday, June 26, 2022
Sunday, June 19, 2022
Sunday, June 12, 2022
Sunday, June 5, 2022
Sunday, May 29, 2022
Sunday, May 15, 2022
Sunday, May 8, 2022
Sunday, May 1, 2022
Sunday, April 24, 2022
சிறுநீரக பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற ஆலோசனைகள்..!!!
சிறுநீரக நோய் பற்றி குறிப்பிட முடியுமா?
நாட்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) சிறுநீரகத்தின் செயற்பாட்டை படிப்படியாகக் குறைக்கும். இந்த நோயின் வளர்ச்சியினால் சிறுநீரகங்கள் சாதாரணமாக செய்யும் இரத்த சுத்திகரிப்பு படிப்படியாகக் குறைக்கப்படும். நாட்பட்ட சிறுநீரக நோயின் வளர்ச்சிக்கான இரண்டு பொதுவான காரணங்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமாகும்.
இதன் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக நோயின் ஆரம்ப கட்டங்களில், இது பொதுவாக எந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் காட்டாது. வழக்கமான இரத்த பரிசோதனைகள், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.
இருப்பினும், சிகிச்சையின்போது சிறுநீரக செயல்பாடு மோசமடைந்தால் அல்லது சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறியவில்லை என்றால், தொடர்ந்து சிறுநீர் பிரியாமை மற்றும் கணுக்கால் வீக்கம், சிறுநீரில் இரத்தம் மற்றும் அதிகரித்த தசைநார் காரணமாக மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
இந்நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
மருந்துகளுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை மாற்றங்கள் சிறுநீரக கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரக செயல்பாடு மோசமடைந்தால், அது இறுதியில் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
இதனால் சிறுநீரக சுத்திகரிப்பு அல்லது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
குறிப்பாக 50 பேரில் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக செயலிழப்பை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் இந்த நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
நாட்பட்ட சிறுநீரக நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன?
பொதுவாக, சிறுநீரகத்தின் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைபாடு ஏற்பட்டாலும் மனித உடல் வெற்றிகரமாகச் செயற்படும். CKD பொதுவாக ஆரம்பக் கட்டங்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதையும் காட்டாது. CKD இன் ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக தெளிவற்றவையாக இருக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட அறிகுறிகள் பற்றி தெளிவுபடுத்த முடியுமா?
பசியின்மை, குமட்டல், வரண்ட தோல் மற்றும் தோல் அரிப்பு, தலைவலி, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற பொதுவான உணர்வு, சோர்வு, எதிர்பாராத அல்லது கட்டுப்பாடற்ற எடை இழப்பு போன்றனவாகும்.
ஒரு வழக்கமான இரத்த அல்லது சிறுநீர் பரிசோதனை ஆரம்ப நிலையில் ஏதேனும் ஒரு பிரச்சினையை வெளிப்படுத்தினால் அல்லது ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால், இந்த நோய் மேலும் தீவிரமடையாமல் தடுக்கலாம்.
தாமதமாக தொடங்கும் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாமலோ அல்லது சிகிச்சை அளிக்கப்படாமலோ இருந்தால், சிறுநீரகநோய் தீவிரமடைந்து பின்வரும் அறிகுறிகளை உருவாக்கலாம்.
அதாவது, இரத்தத்தில் உள்ள கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் அளவுகளில் ஏற்றத்தாழ்வு மற்றும் அதனால் ஏற்படும் எலும்பு வலியால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. கைகள், கால்கள் மற்றும் கணுக்கால்களில் உணர்வின்மை அல்லது வீக்கம். உடலில் கழிவுப் பொருட்கள் தேங்குவதால் அம்மோனியா வாசனை அல்லது மீன்கழிவுகள் போன்ற துர்நாற்றம்,
பசியின்மை மற்றும் எடை இழப்பு, வாந்தி, அடிக்கடி விக்கல் வரும், அடிக்கடி சிறுநீர் கழித்தல் (குறிப்பாக இரவில்), மூச்சுத்திணறல், சோர்வு, சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம், சிந்தனை அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம், தசைப்பிடிப்பு / முதுகு வலி, எளிதான சிராய்ப்பு, அடிக்கடி தண்ணீர் குடித்தல், மாதவிடாய் இல்லாதது (அமினோரியா), தூக்கமின்மை, தோல் வெளிர் அல்லது கறுப்பு நிறமாக மாறும், பாலியல் செயலிழப்பு. CKD இன் கடைசிநிலை சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இறுதிக்கட்டமாக இதற்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். நாட்பட்ட சிறுநீரக நோயைக் குணப்படுத்த முடியாது,
சிகிச்சை மூலம் அதன் மோசமான நிலையைத் தடுக்கலாமா? இதுபற்றி நீங்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற பிற நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ண வேண்டும், உடற்பயிற்சி மற்றும் வழக்கமான இரத்த பரிசோதனைகள் மூலம் அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வைத்தியர் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
இரத்த அழுத்தம் 140/90 மி.மீ இற்குக் கீழ் பராமரிக்கப்பட வேண்டும். cholestrol அளவைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். நாள்பட்ட சிறுநீரக நோய் இரத்த சோகைக்கு காரணம் என்பதால், இரும்புச் சத்துக்கள் பரிந்துரைக்கப்படலாம். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
மேலும், சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். தினமும் உப்பின் அளவை 6 கிராமாக குறைக்க வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களும் வாரத்தில் ஐந்து நாட்களும் உடற்பயிற்சி செய்யுங்கள். மதுபானம் அருந்துவது நல்லதல்ல. உடல் எடையை குறைத்து, உங்கள் உயரத்திற்கும் வயதுக்கும் ஏற்ற ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும். சுய மருந்து வேண்டாம்.போதுமான அளவு நீர் அருந்துதல், புரத உணவு அளவுடன் உட்கொள்ளுதல், குறைந்த சோடியம் உணவுகளை உண்ணுங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். நீச்சல் மற்றும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும். இருப்பினும், நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாவிட்டால், உங்கள் உடல்நலப் பாதுகாப்புக் குழுவிலிருந்து உங்களுக்கு எந்தப் பயிற்சிகள் சரியானவை என்பதைக் கண்டறியவும்.
ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். சீனி கலந்த பானங்களைத் தவிர்க்கவும். குறைந்த கலோரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உப்பு மற்றும் சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பது அவசியம். உடல் பருமன் சிறுநீரகங்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கிறது. உங்கள் உடல் எடையை பராமரிக்க பயிற்சி பெற்ற நிபுணர் மற்றும் உணவியல் நிபுணரின் உதவியை நாடலாம்.
ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். போதுமான தூக்கம் உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சீனி அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
புகைபிடிப்பதைத் தவிர்ப்பது சிறுநீரக பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. நீடித்த மனஅழுத்தம் பல நோய்களை ஏற்படுத்தும்.
ஆழ்ந்த இசையைக் கேட்பது, அமைதியான விடயங்கள் அல்லது செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது அல்லது தியானம் செய்வதன் மூலம் மனஅழுத்தத்தை சமாளிக்க முடியும். வலிமருந்து மற்றும் ஆண்டிபயோடிக் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். சிறுநீர் பகுப்பாய்வில் சிறிய அசாதாரணங்களைக் கூட புறக்கணிக்காதீர்கள். மருத்துவ ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் அல்லது அங்கீகரிக்கப்படாத ஊட்டச்சத்து மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம். எளிய வாழ்க்கை முறை மூலம் உங்கள் சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும். மருத்துவ ஆலோசனையின்படி வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
டாக்டர் ராஸியா நவாஸ், National Institute for Nephrology, Dialysis & Transplantation
Saturday, March 26, 2022
முகத்தைப் போல பாதங்களையும் பேணுவோம்; சர்க்கரை நோயாளிகளுக்கான ஆலோசனை..!!!
தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் பல கோடி மக்கள் இருக்கின்றனர்.இந்த சர்க்கரை நோய் ஆட்கொண்ட மக்களுக்கு முக்கியமாக வரும் பிரச்சினை”கால்களில் ஏற்படும் புண்” இதை Diabetic foot ulcer என்கிறோம்.ஏனைய பிறருக்கு வரும் பாதப்புண்ணுக்கும் ஒரு நீரிழிவு நோயாளிக்கு வரும் பாதப்புண்ணுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உரிய வித்தியாசம் உள்ளது.
காரணம், சரியாக இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்காத ஒரு நீரிழிவு நோயாளிக்கு அவருக்கு வந்த புண் சீக்கிரம் ஆறாது.புண் வந்தால் சரியாக ஆறுவது கடினம் என்று தெரியும். ஆனால், பலருக்கு தங்கள் கால்களில் புண் ஏற்பட்டதே பல நாட்கள் தெரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது .
எப்படி?
முற்றிய நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு தனது பாதங்களில் உள்ள நரம்பு மண்டலத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சிறுகச்சிறுக நலிந்து குறைந்து முற்றிலும் நின்று விடுகிறது.
இதனால் அவர்களது பாதங்களில் உள்ள நரம்புகள் வலி / தொடுதல்/ வெப்பம் உணரும் தன்மையை சிறிது சிறிதாக இழக்கின்றன.
முதலில் கால் லேசாக எரிச்சல் எடுக்க ஆரம்பித்து. காலம் செல்லச்செல்ல எரிச்சல் மரமரப்பு உணர்வாக மாறி பிறகு உணர்ச்சியற்ற நிலைக்கு சென்று விடும்.
உணர்ச்சியற்ற நிலைக்கு சென்ற பாதங்களுக்கு உணர்ச்சி ஏற்படுத்துவது தற்போதைய மருத்துவ வளர்ச்சி கொண்டு இயலாத காரியம்.
இந்த நிலையைத் தான் Diabetic peripheral neuropathy என்கிறோம். நீரிழிவு நோயாளிக்கு வரும் பாத நரம்பு மண்டல அழற்சி.இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பலர் நமது குடும்பங்களிலேயே இருப் பர். இதில் பெரிய சேலஞ்ச் என்னவென்றால் இந்தியா போன்ற அதிக கிராமங்கள் உள்ள நாட்டில்.. 4 கோடி நீரிழிவு நோயாளிகள் கிராமங்களில் தான் வசிக்கின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் காலுக்கு செருப்பு கூட அணியாத பாதசாரிகளாக இருக்கின்றனர்.ஆகவே, தங்களின் கால்களில் ஆணியோ முள்ளோ தைத்தாலும் இவர்களுக்குத் தெரியாது.பல நாட்கள் பார்க்காமல் இருந்து விட்டு , காலில் சீழ் வைத்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தவுடனோ அல்லது தங்களது இடுப்பு பகுதியில் நெறி கட்டிய பின்னரோ அல்லது அந்த புண்ணால் ஏற்படும் குளிர் காய்ச்சல் எனும் நிலை வந்தபிறகு தான் பலருக்கும் அந்த புண் பற்றி தெரிய வரும்.
சிலரது கால்களில் இறந்த பிணங்களை தின்னும் மேகாட்ஸ் எனும் புழுக்கள் மண்டிக்கிடப்பதைக்கூட காண முடியும்.இப்படி ஒரு முள் / ஆணி நமது பாதங்களை தைத்தால் , பாதத்தில் ஊசி போட்டது போல கிருமி நமது தோலுக்கு கீழ் சென்று பத்திரமாக சேர்ந்து விடும், அங்கு பல்கிப்பெருகும். சீழ் வைத்து வெளியே வரப்பார்க்கும்.
அந்த நேரத்தில் சரியாக சிகிச்சை எடுத்து அறுவைச் சிகிச்சை செய்து சீழை வெளியேற்றி விட்டு கட்டுகள் போட்டு தகுந்த மருந்து மாத்திரைகள் எடுத்தால் கால்கள் தப்பிக்கும்.
இல்லாவிடில் அந்த கிருமி தன்னை எதிர்க்க ஆள் இல்லை என அடுத்து தசைகள், எலும்புகள் என ஆதிக்கம் செலுத்தி அழிக்க ஆரம்பிக்கும்.
சாதாரண புண்ணாக இருக்கும் ஒன்று . முற்றிய அழுகிய நிலைக்கு செல்ல சில நாட்கள் போதும்.
இன்னும் அடுத்த நிலை “கேன்க்ரீன்”(gangrene) எனும் இரத்த ஓட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டு கால் விரலோ மொத்தமாகவோ கறுப்பாக மாறிவிடும்.
இந்த நிலையில் அந்த விரலையோ அல்லது கணுக்காலுக்கு கீழோ நாம் காவு(salvage amputation) கொடுத்தாக வேண்டும். இல்லாவிடில் உடல் முழுவதும் அந்தக்கிருமி பரவி (septicemia) உயிரை எடுத்து விடும்.
நாளுக்கு நாள் அறுவைச் சிகிச்சை அரங்குக்கு ஒரு விரல் எடுக்க . கால் எடுக்க என அனுமதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் செல்கிறது.
எனவே, இது போன்ற புண்களை வராமல் பார்த்துக் கொள்ள சில பரிந்துரைகளை நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்குகிறேன் :
1. தினமும் உறங்கச் செல்லும் முன் கால்களை சோப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
2. நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் அமர்ந்து உங்கள் கால்களை முக்கியமாக பாதங்களை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு நன்கு பரிசோதிக்க வேண்டும். புதிதாக ஏதேனும் பாதவெடிப்புகள்/ புண்கள்/ முள் குத்திய தடம் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். (INSPECTION)
3.அடுத்து உங்களின் விரல்களைக் கொண்டு பாதங்களை அழுத்திப்பார்க்க வேண்டும். பல நேரம் முள் குத்திய காயம் வலியே இருக்காது. ஆனால் அந்த இடத்தில் அழுத்தினால் வலி தெரியும். (PALPATION) அப்படி வலி தெரிந்தால் உடனே அடுத்த நாள் காலை மருத்துவரை நாட வேண்டும்.
3. வாரம் ஒரு முறை கட்டாயம் கால் நகங்களை வெட்ட வேண்டும். நகங்களை வெட்டும் போது தோலோடு ஒட்ட வெட்டக்கூடாது. அப்படி வெட்டும் போது தெரியாமல் புண் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு
4. பித்த வெடிப்புகள் இருந்தால் தேங்காய் எண்ணெய் / நீரிழிவு நோயாளிகள் பாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய மாய்ஸ்ச்சரைசர் க்ர்ம்களை தடவலாம்.
கால் பாதங்கள் வறவறவென்று இருப்பதை தவிர்க்க வேண்டும்.
5.கால் விரல்களுக்கு இடுக்கில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக துடைத்து விட வேண்டும். கால்கள் தண்ணீரில் எப்போதும் படுமாறு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப்புண் எனும் பூஞ்சை தொற்று ஏற்படலாம். ஆகவே, அவர்கள் தினமும் கால் விரல்களுக்கு இடுக்கில் உள்ள இடங்களில் சேற்றுப்புண் (Athletes foot) இருக்கிறதா? என்று பார்த்து இருந்தால் அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.
6. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அனைவரும் 50 வயதைத்தாண்டியவர்களாக இருப்பதால் கிட்டப் பார்வை சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே, அதற்குரிய லென்ஸ் கொண்டு பாதங்களை பார்க்கலாம்
7. கால் பாதங்களில் புண் ஏற்பட்டால் போர்க்கால நடவடிக்கையில் சிகிச்சை எடுக்க வேண்டும். கட்டாயம் கட்டுப் போடப்பட வேண்டும். கட்டுப் போடாமல் வெறும் காலில் புண்ணோடு நடப்பது தவறு. மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால்
மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை எடுக்க வேண்டும்.
8. நீரிழிவு நோயாளிகள் வெளியே எங்கு சென்றாலும் கட்டாயம் செருப்பு அணியாமல் செல்லக்கூடாது.
காலணிகள் மிகவும் முக்கியமானவை.
நியூரோபதி வந்தவர்கள் MCR சப்பல் எனும் காலணிகளை வாங்கி அணியலாம். குளிர் காலத்தில் வீட்டில் இருந்தால் கால்களில் சாக்ஸ் அணியலாம். வெளியே ஷூக்கள் அணிந்து செல்லலாம். முட்கள் அதிகம் இருக்கும் பகுதி களில் வசிப்பவர்கள் ஷூக்கள் அணிந்து வெளியே செல்வது சிறந்தது.
காலை வாக்கிங் செல்பவர்கள் – ஷூ அணியாமல் செல்லக்கூடாது.
முக்கியமான பரிந்துரை
நீரிழிவை கட்டுக்குள் வைக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவு களை வீட்டிலேயே க்ளூக்கோமீட்டர் கொண்டு சோதித்து பார்க்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவுகளை சரியாக பராமரித்தால் இந்த நியூரோபதி வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மருத்துவரிடம் சரியாக காண்பித்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்குரிய மருந்துகளை சரியாக எடுக்க வேண்டும்.முகத்தை அழகாக தினமும் கண்ணாடியைப் பார்த்து பராமரிப்பதை விட, பல மடங்கு கவனமாக நமது பாதங்களை பராமரிக்க வேண்டும்.
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Sunday, February 20, 2022
தலைக்கவசம் பாவனையும் முடி உதிர்தலும்..!!!
தலைக்கவசம் அணிந்தால் முடி உதிரும் என்ற எண்ணம் பெரும்பாலான மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களிடம் இருக்கிறது.
இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது அவசியமானது. உயிர் காக்கும் கவசமாக செயல்படும் அதனை அணிவதை அசௌகரியமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலை கவசத்துக்கும், முடி உதிர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தலைக்கவசம் அணியும்போது தலை முடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று (ஆக்சிஜன்) தடைபடும். அப்படி காற்று உட்புகுவதற்கு வழி இல்லாமல் போவதால் முடியில் வியர்வை படிந்துவிடும் என்பது வாகன ஓட்டிகளின் வாதமாக இருக்கிறது. ஆனால் அது தவறானது. ஏனெனில் வெளி காற்றில் இருந்து கிடைக்கும் ஒக்சிஜன் முடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஒக்சிஜன் இரத்தத்தில் இருந்து கிடைத்துவிடும்.
தலைமுடியை இறுக்கமாக வைத்திருக்கும் பட்சத்தில்தான் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்து முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் இறுக்கமாக தலைபின்னியபடி ஹெல்மெட் அணிந்து, ஆண்கள் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலரவைக்காமல் ஹெல்மெட் அணிவது போன்ற காரணங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை.
தலைகவசம் எப்போதும் சுத்தமான நிலையில் இருக்குமாறு பராமரிக்க வேண்டியதும் அவசியம். அவற்றில் அழுக்கு படிந்திருக்கும் நிலையில் அப்படியே அணிவதுதான் முடியின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமைகிறது.
தலை கவசத்தை மென்மையாக கையாள வேண்டும். பருத்து துணி அல்லது கர்ச்சிப்பை தலையில் அணிந்து விட்டு அதன் மீது தலைகவசம் பயன்படுத்துவது தலை முடிக்கு பாதுகாப்பானது.
Wednesday, February 9, 2022
Monday, November 29, 2021
Sunday, November 28, 2021
நீரிழிவு மருந்துகளை நிறுத்திக்கொள்ள முடியுமா?
நீரிழிவை குணப்படுத்த முடியுமா? அதாவது நீரிழிவு நிலைக்கு மருந்து பாவித்த ஒருவர் அந்த மருந்துகளை முற்றாக நிறுத்திக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுமா? இது நடைமுறைச் சாத்தியமாகுமா? என்பன பொதுவாக பலராலும் கேட்கப்படும் ஒரு விடயமாக இருந்து வருகிறது.
நீரிழிவு நிலைக்கான மருந்துகளை சிலசமயம் நிறுத்திக்கொள்வது சாத்தியம் ஆகக்கூடிய ஒரு விடயமே. சிலருக்கு நீரிழிவுக்கான மருந்துகளை முற்றாக நிறுத்தக்கூடிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பின்வரும் நிலை உள்ளவர்களுக்கு இது சாத்தியப் படக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.
- கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்பட்டவர்கள் – கர்ப்ப காலம் முடிவடைந்ததும் நீரிழிவு மருந்துகளை நிறுத்திக்கொள்வது சாத்தியப்படலாம்.
- அழுத்தங்கள் தொற்றுகள் என்பவற்றுடன் நீரிழிவு கண்டறியப்பட்டவர்கள்- அந்த நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குவந்த பின்னர் நீரிழிவுக்கா மருந்துகளை நிறுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
- அதிகரித்த உடல்நிறையுடன் ஒழுங்காக உடற்பயிற்சி உணவுக்கட்டுப்பாடு என்பவற்றில் ஈடுபடாத ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்ட நீரிழிவு நோயாளர்கள் தமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து நிறை குறைந்து பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம்இது சாத்தியப்படலாம்.
- சில மருந்துகள் காரணமாக நீரிழிவு ஏற்பட்டவர்கள் அந்த மாத்திரைகளை நிறுத்தியவுடன் நீரிழிவு நிலை தானாக குறைவடையலாம்.
- சில ஓமோன்களின் அதிகரித்த சுரப்பால் ஏற்படும் நீரிழிவு நிலை அந்த அடிப்படை காரணம் நிவர்த்தி செய்யப்பட்டவுடன் தானாக மறைந்து விடும்.
அமைதியை பேணுதல், சீனி, சர்க்கரை பனங்கட்டி அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்த்தல் போன்ற சிறிய நடவடிக்கைகள் மூலம் நாம் பெரிய பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.
பொருத்தமான நடவடிக்கைகள் மூலம் மருந்துகளை குறைத்துக் கொள்வதோ நிறுத்திக் கொள்வதோ சாத்தியமாகும்.
ஒரு தடவை நீரிழிவுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தொடர்ந்து வரும் காலங்களில் அவர்களின் நீரிழிவு நிலை கட்டுப்பாட்டில் இருந்தாலும் 2-3 மாதங்களுக்கு ஒரு தடவையாவது குருதி குளுக்கோசை சோதித்துப் பார்த்துக் கொள்வது அவசியமாகும். வாழ்க்கை முறையில் சிறுசிறு மாற்றங்களை செய்து பாரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்போம்.
நீரிழிவு நிலை ஒரு பாரிய நோய் என்று எண்ணி மனக்குழப்பம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனைகட்டுப்படுத்த
வழங்கப்படும் மருந்துகள் பக்கவிளைவு குறைந்தவை. எனவே மருத்துவ ஆலோசனை இன்றி இதற்கான மருந்துகளை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முயற்சி எடுப்பது பாதுகாப்பானது அல்ல. இந்த நிலையை நாம் மன ஊக்கத்துடன் வெற்றிகரமாக எதிர் கொண்டு சுகதேகியாக வாழ முடியும்.
Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்
Tuesday, November 23, 2021
Sunday, October 31, 2021
கால் புண்கள் ஏற்பட்டால் நீரிழிவு நோயாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ இழப்பு செய்யப்பட வேண்டிய பாரதூர மான நிலையையும் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய பரிதாபநிலை யையும் ஏற்படுத்துகின்றன.
நீரிழிவு நோயாளர்களுக்கு ஏன் காலில் புண்கள் ஏற்படுகின்றன?
01.நீரிழிவு பாதிப்பினால் தசைகளில் ஏற்படும் வலிமை இழப்புக் காரணமாக, பாதங்களில் சாதாரணமாகக் காணப்படும் வளைவுத் தன்மைகள் சீரற்றுப் போகின்றன. இதனால் உடற்பாரமானது பாதங்களில் ஒழுங்கின்றிப் பரவி விழுகின்றது. இதுபாதத்தோல்களில் சிறிய காயங் களும் தோல் தடிப்பு (ஆணிக்கூடு போன்றவையும் ஏற்பட வழிவகுக் கின்றது.
02.நரம்புமண்டலத்தில் ஏற்படும் நீரிழிவு பாதிப்பு காரணமாக காலில் உள்ள தொடுகை உணர்ச்சி குறைவடை வதால் காலில் ஏற்படும் காயங்கள் நோ வலி என்பவை, இலகுவாக உணரப்படுவதுஇல்லை. இந்தநிலை மேலதிக கிருமித் தாக்கம் ஏற்படு வதற்கு ஏதுவாக அமைகின்றது.
03.நீரிழிவு நோயின் பாதிப்பின் ஒரு கட்டமாக காலுக்கும் பாதத்துக் கும் இரத்த வோட்டம் குறைவடைகிறது. இதனால் கால் பாதங்களில் உள்ள தோல் மற்றும் இழையங்களுக்கு போசணையும் நல் இரத்தமும் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் கிருமித் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
எவ்வாறான நீரிழிவு நோயாளர் களுக்கு இவ்வாறான கால் புண்கள் வரச் சாத்தியங்கள் அதிகம்?
01.காலில் பாதத்தில் உணர்வுத்திறன் குறைவடைந்தவர்கள்.
02.காலில் குருதிச் சுற்றோட்டம் குறைவாக உள்ளவர்கள்
03.பாதங்களின் விரல்களின் வடிவமாற் றம் ஏற்பட்டவர்கள்.
04.சிறுநீரக கண் பாதிப்பு ஏற்பட்ட நீரிழிவு நோயாளர்கள்.
05.ஒரு முறை காலில் புண் வந்து மாறியவர்கள்.
06.கால் மற்றும் பராமரிப்பு குறைபாடு உள்ள நீரிழிவு நோயாளர்கள்.
காலில், பாதங்களில் ஏற்படும் புண்களைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் செய்யக் கூடியவை
01.கால்களையும் பாதங்களையும் தினசரி அவதானித்து பராமரிக்க வேண்டும்.
02.ஏதாவது சிறு காயங்கள் மற்றும் மாற்றங்கள் பாதங்களில் ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும்.
03.குருதியில் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
04.குருதி அழுத்தம் கொலஸ்ரோல் அதிகமாதல் போன்றவற்றுக்கு மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளைக் கையாள வேண்டும்.
05.புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
கால் புண்கள் ஏற்பட்டால் நீரிழிவு நோயாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
01.கைவைத்தியம் மற்றும் சுயவைத்தியம் செய்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
02.சிறிய காயம் எனினும், தகுதியான மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
03.காயங்களுக்கும் புண்களுக்கும் உரிய மருந்திட்டு பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும். கிருமித் தொற்றுக்கான மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி கிரமமாக எடுக்க வேண்டும்.
மருத்துவர்.சி.இராஜேந்திரா
சத்திர சிகிச்சை நிபுணரும்,
சிரேஷ்ட விரிவுரையாளரும் ,
யாழ்.போதனா வைத்தியசாலை.