Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Wednesday, 4 October 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!



லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய 3470 விலை ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!

யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.















Tuesday, 3 October 2023

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.

அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.

அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர். அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.

இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் , தமது காணிகளுக்குள் ஊடுருவும் திருடர்களை கட்டுப்படுத்தும் முகமாக தமது காணிகளை சுற்றி வேலி அடைத்து , அக்காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை அடுத்து அப்பகுதியில் தமது காணிகளை சுற்றி வேலி அடைக்க பிரதேச செயலர் அனுமதி அளித்துள்ளார்.

அதேவேளை 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த மாங்கொல்லை வைரவர் ஆலய திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




Monday, 2 October 2023

சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிக்கப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

நுணாவிலில் பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றின் உரிமையாளரான கிளிநொச்சி , பளை பகுதியை சேர்ந்த பராமநாதன் ஜோதீஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவர் எனவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Sunday, 1 October 2023

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!


எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது.

அதன்படி 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்று 4 ரூபாயினால் அதிகரித்து 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 351 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒன்றின் விலை 62 ரூபாயினால் அதிகரித்து 421 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை லீற்றர் ஒன்றுக்கு 11 ரூபாயினால் அதிகரித்து 242 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.