Showing posts with label sri lanka news. Show all posts
Showing posts with label sri lanka news. Show all posts

Thursday, March 23, 2023

புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் - சாவகச்சேரியில் நிகழ்வு..!!!

புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் - சாவகச்சேரியில் நிகழ்வு..!!!


'புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்' எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகளால் அறுவடை செய்த புதிய நெல்லில் இருந்து பெற்ற அரிசி வழங்கப்பட்டது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியில் வாசம் செய்யும் புத்த பகவானை ஆராதிப்பதற்கு மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் உங்களுக்கு அருகில் உள்ள கமநல சேவைகள் நிலையத்திற்கு புத்தரிசியை எடுத்து வந்து வழங்க முடியும் என கமநல சேவை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்..!!!

யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்..!!!



மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை மீள் பொதி குற்றச்சாட்டில் கைதான நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

கடந்த ஒக்டொபர் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் பழப்புளி பொதி செய்யப்படுவதாக பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைத்த பொது சுகாதார பரிசோதகர் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை கைப்பற்றி இருந்தார்.

மறுநாள் 26ஆம் திகதி யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் கைப்பற்றப்பட்ட பழப்புளியையும் , அதனை உடைமையில் வைத்திருந்த நபரையும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் , புளியை உடைமையில் வைத்திருந்தவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார். அத்துடன் கைப்பற்றப்பட்ட பழப்புளியை பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் கட்டளையிட்டார்.

இந்நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேகநபர் கடுமையான நிபந்தனைகளுடன் 36 நாட்களின் பின்னர் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையிலும் , அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் பழப்புளி வண்டுகள் தாக்கி , மனித பாவனைக்கு உதவாதது என கிடைக்கப்பெற்றதை அடுத்து , புளியை உடைமையில் வைத்திருந்த நபரை குற்றவாளி என கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
அச்சுவேலி வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மருந்து வகைகள் அன்பளிப்பு..!!!

அச்சுவேலி வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மருந்து வகைகள் அன்பளிப்பு..!!!


அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமியின் ஏற்பாட்டில் மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் இன்றைய தினம் வியாழக்கிழமை இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர்களுக்கான, அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்ட மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையாவார்.

காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில் மேசன் வேலை செய்யும் போது, வீட்டின் மேற்புறத்தில் கம்பியை கொண்டு வேலை செய்த வேளை, கம்பியானது பிரதான வீதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பியுடன் தொடுகையுற்றதால் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அங்குள்ளவர்கள் அவரை மீட்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியான தகவல்..!!!

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியான தகவல்..!!!



யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் வீசப்பட்டிருந்த வளர்ச்சியடையாத சிசுவின் சடலம் கருச்சிதைவு காரணமாக அகற்றப்பட்டதாக இருக்கலாம். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 22ம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த வளச்சியடையாத சிசுவின் சடலம் தொடர்பாக ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஒரு பெண் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசல கூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகிறோம்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளோம் விசாரணைகள் இடம்பெறுகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!

 


இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.60 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (23.03.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.



Wednesday, March 22, 2023

புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்..!!!

புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்..!!!


ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (22) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவும், புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை - கலாநிதி ஆறுதிருமுருகன்..!!!

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை - கலாநிதி ஆறுதிருமுருகன்..!!!


உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையினால் நிறுவப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை சம்பிரதாயபூர்வமாக திறந்த வைக்கப்படவுள்ளது.

3 ஆயிரம் தமிழ் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப் பெட்டகமான திருமந்திரத்தை கையால் உளிகொண்டு மூன்று ஆண்டுகளாக இளைஞர்கள் கருங்கல்லில் செதுக்கியுள்ளனர்.

இந்தப் பாடல்களை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

108 சிவலிங்கமும் நடுவில் கருங்கல்லினால் ஆக்கப்பட்ட கோவிலில் முகலிங்கப்பெருமானும் கிழக்கிலங்கையில் முதல் முதலாக வித்தியாசமான முறையில் காட்சியளிக்கின்றது.

கிழக்கிலங்கையில் தானாகத் தோன்றிய தான்தோன்றிஸ்வரர் போத்துக்கேயர் அந்த இடத்திற்கு வந்தபோது இந்த மாடு கருங்கல் மாடு சாணிபோடுமா என்று கேட்டபோது அந்த மாடு எழுந்து நின்று போட்ட சாணி கருங்கல் சாணியாக இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றது.

போர்த்துக்கேய தளபதிகளே இந்தக் கோவிலை பெருமையாக நினைத்து வழிபட்ட மரபு இன்றும் பேசப்படுகின்றது. அந்த இடத்தில் தோன்றிய தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கிழக்கிலே பிரமாண்டமான கோவில் பல லட்சம் மக்கள் ஒன்றுகூடுகின்ற அந்தக் கோவிலில் இப்போது யாழ்ப்பாணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளை சிவபூமி அறக்கட்டளை பல லட்சம் ரூபா செலவில் அந்தத் திருமந்திர அரண்மனையை அமைத்துள்ளார்கள்.

திருவாசக அரண்மனையை நாவற்குழியில் அமைத்து பேணிப் பாதுகாப்பது போன்று கிழக்கிலங்கையிலே இந்தப் பணி செய்து கிழக்கிலங்கை மக்களிடமே தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் நிர்வாகத்திடனே இந்தப் பணியை ஒப்படைக்கின்றார்கள்.

இங்கே கருங்கற் கோவிலிலே முகலிங்கம் இலங்கையிலே ஒரே ஒரு ஆலயத்திலே இணுவில் காரைக்கால் சிவன் கோவிலிலே முகலிங்கம் இருக்கின்றது. இப்போது கிழக்கிலங்கையில் மூலக்கருவறையிலே முகலிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

108 சிவலிங்கம் கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கின்றது 3 ஆயிரம் திருமந்திரப் பாடல்களும் வாசலிலிலே அசையாத் தேராக சிற்பத்தேர் ஒன்று உருவாக்கப்பட்டு அந்தத் தேரிலே சிவபெருமானும் திருமூலராகிய திருமந்திரத்தைப் படைத்த திருமூலரும் சிற்பமாக எழுந்தருளச் செய்துள்ளார்கள்.

இது மட்டுமல்ல திருமந்திர அரண்மனைச் சுற்றாடல்கள் புனிதம் பெறக்கூடியதாக அங்கே பல்வேறு விடயங்கள் நிலைநாட்டப்பட்டு சம்பிரதாயபூர்வமாக கிழக்கிலங்கை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 24 அம் திகதி இடம்பெறவுள்ளது.

கிழக்கிலங்கை மக்கள் மட்டுமல்ல அனைத்து சைவ மக்களும் வருகை தந்து உலக அதிசயமான 3 ஆயிரம்; பாடல்கள் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ள 1330 திருக்குறள் இந்தியாவில் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது திருவாசகம் யாழ்ப்பாணத்தில் 650 பதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உலகத்திலேயே 3 ஆயிரம் தமிழ்ப்பாடல்களை கருங்கல்லில் பதிப்பித்த பெருமை சிவபூமி அறக்கட்டளையைச் சாரும் இதைத் தாங்குகின்ற பெருமை கிழக்கிலங்கை மக்களைச் சாரும் அற்புதமான இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.




யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இடையில் மோதல்..!!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இடையில் மோதல்..!!!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்டமையை அடுத்து இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இருவர் இன்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர்.

அதனை அடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியதுடன் , வைத்தியசாலை பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனை அடுத்து பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!




இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 330.16 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.03.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.



தரம் 5 புலமைப்பரிசில் - பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு..!!!

தரம் 5 புலமைப்பரிசில் - பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு..!!!


2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன.



யாழ்.போதனாவில் மேல் மாடியில் இருந்து வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு..!!!

யாழ்.போதனாவில் மேல் மாடியில் இருந்து வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு..!!!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மேல் மாடியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து குறித்த சிசு வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில். தாய் பால் கொடுக்காததால் இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு..!!!

யாழில். தாய் பால் கொடுக்காததால் இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு..!!!



மருதங்கேணி பகுதியில் தாய் பால் கொடுக்காததால், இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில்,

மருதங்கேணி பகுதியில் அண்மையில் 2 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்படாதமையாலையே உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் உள நோய்க்கு உள்ளானவர். தகப்பன் மதுவுக்கு அடிமையானவராக காணப்பட்டுள்ளார். இவ்வாறான சூழலில் குழந்தை பராமரிப்பு இன்றி உயிரிழந்துள்ளது என தெரிவித்தார்.


Tuesday, March 21, 2023

அடம்பன் விபத்தில் இளைஞன்  உயிரிழப்பு..!!!

அடம்பன் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு..!!!


மன்னார் அடம்பன் – உயிலங்குளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அடம்பன் புளியங்குளத்தை சேர்ந்த தமிழரசன் பிரசாந்த் (வயது -30) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தனர். குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏனைய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊர்காவற்றுறை இறங்கு துறை இடிந்து விழுந்தது..!!!

ஊர்காவற்றுறை இறங்கு துறை இடிந்து விழுந்தது..!!!


காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.

இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் குறித்த இறங்குதுறை இடிந்து விழுந்துள்ளது. அதனால் படகு சேவையில் பயணிக்கும் பயணிகள் இடிந்து விழுந்துள்ள இறங்குதுறையில் ஆபத்தான நிலையில் நின்றே படகுகளில் ஏறி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

எனவே விரைவாக இதைத் திருத்தம் செய்து தமது சீரானதும் பாதுகாப்பானதுமான போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


“யாழ் மக்கள் அன்பானவர்கள்”  ஒளிப்பதிவிற்காக யாழ் வருகை தந்துள்ள பாபா மாஸ்டர்..!!! (Video)

“யாழ் மக்கள் அன்பானவர்கள்” ஒளிப்பதிவிற்காக யாழ் வருகை தந்துள்ள பாபா மாஸ்டர்..!!! (Video)


தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

ஜீ தமிழ் சூப்பர் ஜோடி படப்பிடிப்புக்காக அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.







திடீரென மயங்கி வீழ்ந்த மாணவன் உயிரிழப்பு..!!!

திடீரென மயங்கி வீழ்ந்த மாணவன் உயிரிழப்பு..!!!



பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், மாணவன் ஒருவன் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சுருண்டு வீழ்ந்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டு வாரங்களில் மந்திரிமனை மீள் உருவாக்க பணிகள் ஆரம்பம்..!!!

இரண்டு வாரங்களில் மந்திரிமனை மீள் உருவாக்க பணிகள் ஆரம்பம்..!!!


சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரி மனை மீள் உருவாக்க செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான நிதியுதவிகளை மக்களிடம் கோருகிறோம் என தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மந்திரிமனை வளாகத்தினுள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,அது தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முகமாகவே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

2010 ஆம் ஆண்டு பிராந்திய தொல்லியல் திணைக்களம் ஒன்று உருவாக்கப்பட்டது. குறித்த திணைக்களத்தின் ஆலோசகராக பதவியாற்றி இருக்கின்றேன் அதனால் குறித்த விடயம் தொடர்பில் நான் சில கருத்துக்களை கூறலாம் என நினைக்கிறேன்...

யாழ்ப்பாணத்தில் 86 இடங்கள் மரவுரிமை இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாசல், ஜமுனா ஏரி மற்றும் சங்கிலியன் அரண்மனை ஆகிய இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு அவற்றுக்கான பெயர்ப் பலகையும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவை வர்த்தகமானிலும் வெளியிடப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களம் மரவுரிமை இடங்களாக அடையாளப்படுத்தி அதனை வர்த்தகமானியில் பிரசுரம் செய்தால் நில உரிமையாளர் அங்கு புதிதாக எதையும் மாற்றி அமைக்க முடியாது. அதே சமயத்தில் தொல்லியல் திணைக்களமும் நில உரிமையாளரின் அனுமதியின்றி எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது. இதனால்தான் மந்திரிமனை உரிய காலத்தில் பேணப்படாமைக் கான காரணமாகும்.

அதே சமயம் தொல்லியல் திணைக்களம் மந்திரி மனை தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் நில உரிமையாளருடன் பேரம்பேசி அந்த நிலத்தைப் பெற்று அதனை சீர் செய்யும் வசதிகளும் நிலமைகளும் தற்போது தொல்லியல் திணைக்களத்திடம் இல்லை.

அதனால் தான் நாம் யாழ்ப்பாணத்தில் மரவுரிமை மையம் ஒன்றினை உருவாக்கி அதன் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாசலை மீள் உருவாக்கம் செய்து அதுமுடிவுறும் நிலையில் இருக்கின்றது. இரண்டு வாரத்தில் அது முடிவடையும் அதை செய்வதற்கு எங்களுடைய மருத்துவபீட பேராசிரியர் மருத்துவர் ரவிராஜ் அவர்கள் 2.2 மில்லியன் ரூபாவினை அதாவது அதற்குரிய செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார். மந்திரி மனையை மீள் உருவாக்கம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்ட போது அதனுடைய உரிமையாளர் எங்களோடு தொடர்பு கொண்டு சில நிபந்தனைகளை விதித்தார். தன்னுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டு தனியாரால் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன எனவும், அவற்றை சட்டநாதர் கோவிலுக்குப் பெற்றுத்தருவதற்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நாங்களும் முயற்சி செய்தோம் அது முழுமையாக வெற்றி அளிக்கவில்லை. பின்னர் நாங்கள் அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு முயற்சி எடுத்தோம். அதனை அவர் தவணை முறையில் பணம் செலுத்தி பெறுவதற்கு ஒப்புக்கொண்டு பல மாதங்கள் பேசியதன் பின்னர் இப்பொழுது எங்களுக்கு அதற்கான ஒப்புதலைத் தந்திருக்கின்றார்.

நாங்கள் தற்போது அதற்குரிய பணத்தை அவருக்குக் கொடுத்து மீள் உருவாக்க பணியை முன்னெடுத்துள்ளோம் சில ஆரம்பப் பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு செய்து கொண்டிருக்கும் பொழுதுதான் நில உரிமையாளர் ஒப்பந்த முடியும் வரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதனால்தான் அந்த இடத்தினை தொல்லியல் திணைக்களம் தனியாக மீள் உருவாக்கம் செய்ய முடியாது. அதே நேரத்தில் நில உரிமையாளரும் வர்த்தகமானியில் வெளியிடப்பட்ட மரவுரிமைச் சின்னத்தை தான் விரும்பியவாறு எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள முடியாது. இப்பொழுது நில உரிமையாளர் எங்களுக்கு நிலத்தைத் தருவதற்கு முழுமையான ஒப்புதல் அளித்திருக்கின்றார். நாங்கள் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் மீள் உருவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு அவை தொல்லியல் திணைக்களத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே சங்கிலியன் தோரண வாசல் வேலைகள் பூர்த்தி அடைந்ததன் பின்னர் மந்திரி மனையின்பணிகள் ஆரம்பிக்கப்படும். அதனை மேற்கொள்வதற்கு இன்று மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையத்தில் இருக்கிறவர்களும் பெரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் ஐந்து பேர் நினைத்த உடனே இதை செய்து கொள்ள முடியாது பல மில்லியன் கணக்கான பணம் அவற்றை மீள உருவாக்குவதற்கு எங்களுக்கு தேவை நாங்கள் அந்த பணியை தொடங்குகின்ற பொழுது ஊடகங்கள் ஊடாகவும் அதிருப்தி நிலையில் உள்ள மக்களிடமும் அவற்றை மீள் உருவாக்கம் செய்வதற்கு நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுப்போம். அவ்வாறு செய்கின்ற பொழுது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியும் என்பது தான் உண்மையான நிலைப்பாடு. என்றார்.