Showing posts with label sri lanka news. Show all posts
Showing posts with label sri lanka news. Show all posts

Wednesday, 4 October 2023

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு..!!!



லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய 3470 விலை ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!

யாழில் மனித சங்கிலி போராட்டம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.















Tuesday, 3 October 2023

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி..!!!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.

அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.

அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர். அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.

இந்நிலையில் காணி உரிமையாளர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் , தமது காணிகளுக்குள் ஊடுருவும் திருடர்களை கட்டுப்படுத்தும் முகமாக தமது காணிகளை சுற்றி வேலி அடைத்து , அக்காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை அடுத்து அப்பகுதியில் தமது காணிகளை சுற்றி வேலி அடைக்க பிரதேச செயலர் அனுமதி அளித்துள்ளார்.

அதேவேளை 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த மாங்கொல்லை வைரவர் ஆலய திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!

யாழ். சாவகச்சேரியில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில், மரம் முறிந்து விழுந்தமையால் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைபட்டு இருந்ததுடன் , நகருக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர் பகுதியில் நின்ற சுமார் 200 வருட காலத்திற்கு மேற்பட்ட வேப்ப மரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது.

அதனால் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் மின்சார வயர்களுக்கும் மேலும் மர கிளைகள் விழுந்தமையால் , மின்சார கம்பங்கள் முறிவடைந்ததுடன் , நகர் பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டது.

அத்துடன் மரத்திற்கு கீழ் இருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு டிக்கெட் விற்கும் கடையும் சேதமடைந்ததுடன் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

சாவகச்சேரி நகர சபை , இலங்கை மின்சார சபையினர், நகர் பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதுடன் , வீதி ஊடான போக்குவரத்தை சீர் செய்தனர்.





யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்..!!!

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கம்..!!!


முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்குவதாக கூறி தங்கச் சங்கிலியை அபகரித்து சென்ற இளைஞர்..!!!

‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்குவதாக கூறி தங்கச் சங்கிலியை அபகரித்து சென்ற இளைஞர்..!!!


திருகோணமலை நகரில் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறீன் வீதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் ‘சப்ரைஸ் கிஃப்ட்’ கொடுக்கவந்துள்ளதாகக் கூறி பாசாங்கு செய்து வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர் மூதாட்டி அணிந்திருந்த ஐந்து பவுண் தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.

இலக்கத்தகடு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரே இவ்வாறு தங்கச்சங்கிலியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுகப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நண்பர்கள் உறவினர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு தெரியாத நபர்கள் மூலம் ‘சப்ரைஸ் கிஃப்ட்’ வழங்கும் போக்கு அதிகரித்து வருகிற நிலையில் அதனை பயன்படுத்தி இவ்வாறான அபகரிப்பு சம்பவங்களும் அங்காங்கே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்த நிலையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!!!

யாழில் குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்த நிலையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!!!



யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தாய் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளது.

அவர் தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, 2 October 2023

யாழ். பாடசாலையில் சக மாணவனுக்கு சொக்லேட் கொடுத்த மாணவி! அண்ணன் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்..!!!

யாழ். பாடசாலையில் சக மாணவனுக்கு சொக்லேட் கொடுத்த மாணவி! அண்ணன் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்..!!!


யாழில் மாணவ சிறுமி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன்,மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லெட் வழங்கியுள்ளார். அவர் 14வயதுடைய மேற்படி தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் சொக்லெட் வழங்கியுள்ளார்.

இதையடுத்தே எதற்காக சொக்லெட்டை வாங்கினாய்? என்று வினவி மாணவியின் 17வயதுடைய அண்ணன் அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவியின் அண்ணனின் தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
யாழில் வாள் வெட்டு - இளைஞன் படுகாயம்..!!!

யாழில் வாள் வெட்டு - இளைஞன் படுகாயம்..!!!


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை பட்டா ரக வாகனத்தில் வந்த வன்முறை கும்பல் ஒன்று வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பிக்க , இளைஞன் முச்சக்கர வண்டியை கைவிட்டு வீதியில் ஓடிய போதிலும் , துரத்தி துரத்தி வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

வீதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

சாவகச்சேரியில் விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிக்கப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

நுணாவிலில் பகுதியில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றின் உரிமையாளரான கிளிநொச்சி , பளை பகுதியை சேர்ந்த பராமநாதன் ஜோதீஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவர் எனவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Sunday, 1 October 2023

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!!!

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!!!


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதி ஒன்றில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (01-09-2023) காலை நந்திக்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய தர்மராசா நிசாந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் இன்றையதினம் அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு முன்னாள் உள்ள நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு..!!!


எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது.

அதன்படி 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்று 4 ரூபாயினால் அதிகரித்து 365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 351 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒன்றின் விலை 62 ரூபாயினால் அதிகரித்து 421 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை லீற்றர் ஒன்றுக்கு 11 ரூபாயினால் அதிகரித்து 242 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு..!!!

கிளிநொச்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு..!!!


கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். இந்த சிறுவர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது

பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை வறுமை உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 2765 க்கு மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இவ்வாறு போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதாவது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1288 சிறுவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 884 சிறுவர்களும் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 393 சிறுவர்களும் இவ்வாறு போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தின் தகவல்கள் மூலம் அறிய முடிந்துள்ளது.
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா..!!!

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா..!!!




வரலாற்று பிரசித்திபெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய ஏழாம் திருவிழாவான கப்பல் திருவிழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பகல் திருவிழாவினைத் தொடர்ந்து இரவு விஷேட மேளக்கச்சேரிகள் இடம் பெற்று அதிகாலை வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி வீதியுலா வரும் போது வடக்கு வீதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கப்பலாட்டும் வைபவம் இடம் பெற்றது.

இதன்போது கப்பல் திருவிழாவின் கதைகள் வாசிக்கப்பட்டு பாடப்பட்டு கப்பலாட்டும் வைபவம் இடம்பெற்றது.

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயக் கப்பல் திருவிழாவில் தென்னிந்திய பிரபல பாடகி நித்யஸ்ரீ குழுவினரின் இசை நிகழ்வும் இடம்பெற்றது.

அந்நியர்கள் நாகர்கோயில் பகுதிக்கு வந்து இங்குள்ளவர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றிச்செல்ல முற்பட்டபோது நாகதம்பிரான் கப்பலைத் தடுத்து இவ்வூர் மக்களை மீட்டமை தொடர்பாகவே இக்கப்பல் திருவிழா நடைபெறுகிறது. கப்பல் திருவிழா தொடர்பாக பல்வேறு பட்ட கதைகள் காணப்படுகிறது.



Friday, 29 September 2023

உலக சுற்றுலா தினம்..!!!

உலக சுற்றுலா தினம்..!!!


வடமாகாண சுற்றுலாப் பணியகமும் தொழிற்துறைத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் உலக சுற்றுலா தினம் இன்று (29.09.2023) காலை 9.00மணிக்கு யாழ்.இந்திய கலாசார மையத்தில் இடம்பெற்றது.

காலை, மாலை என திட்டமிடப்பட்ட இந் நிகழ்வில் காலையில் வடமாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் தொழிற் சந்தையும் மாலை நிகழ்வுகளாக மான் ஆட்டம்,மயில் ஆட்டம், வசந்தன் ஆட்டம், வீணை இசைக் கச்சேரி என்பனவும் இடம் பெற்றன. 

மேலும் உள்ளூர் உற்பத்திகளான அழகு சாதனப் பொருட்கள் சமையலறைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் ,துணிப் பொருட்கள் ,தோல் பொருட்கள்,கிருமி நீக்கிகள் சலவைத் திரவங்கள் ,கடதாசிகளில் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு என்பனவும் விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் பாரம்பரிய உணவு வகைகளாக அல்லை விவசாயியின் குரக்கன் கூழ் இலைக்கஞ்சி என்பனவற்றுடன் அம்மாச்சி உணவகத்தின் அப்பம் மரக்கறி கூழ் கட்லட் போன்றனவும், பல்வேறு உணவு தயாரிப்புக்களும் காட்சிக் கூடங்களை அ லங்கரித்தன.

குறித்த நிகழ்வு பற்றி பெண்மணி ஒருவர் கூறுகையில்

"பைகளில் அடைக்கப்பட்ட சில உணவுகளை வாங்கும் போது கவனம் தேவை. சிலவற்றை சாப்பிட்டு பார்த்து வாங்கலாம். சிலவற்றை பார்த்து வாங்க முடியாது. அதனால் வாடிக்கையாளர் நாம் ஏமாறுகின்றோம்.

கடந்த முறை கண்காட்சியில் நூறு ரூபா படி 7 கஜு பிஸ்கட் வாங்கினோம். அவை முடிவுத் திகதி திகதி முடிவடைந்துள்ளது.அதன் மேல் புதிய லேபல் ஒட்டி விற்பனை செய்துள்ளனர். அதே போன்று உள்ளி ஊறுகாய் நெத்தலி ஊறுகாய் போன்றன ஒரு வருடத்திற்கான திகதியிடப்பட்டு இருந்தும் அவை தரமற்றதாகவே இருந்தது.நாம் எம்மவர்களை ஊக்குவிக்கவே விரும்பி வாங்கினோம்.ஆனால் ஏமாந்தோம்.

அதனால் இம்முறை வற்றல் பொருட்களை கொள்வனவு செய்தோம். கூழ் வகை இலைக்கஞ்சி பனங்காப் பணியாரம் பாணிப்பூரி சாப்பிட்டோம். சில உடன் உணவுகள் சூடாக உண்பதற்கு ஏற்ற வகையில் காற்று விடவில்லை. காஸ் அடுப்பு அடிக்கடி அடுப்பு அணைந்து கொண்டிருந்தது. இப்படி சிலவற்றை சொல்ல முடியும்.

ஆயினும் இந்த வாரம் முற்றவெளிப் பண்ணைப் பக்கத்திலும் யாழ் பல்கலையிலும் உணவுத் திருவிழா இடம்பெற்று வருகின்றது. எம்மவர்கள் தயாரிப்பிலும் சுத்தத்திலும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றேன் என்றார். அதிகம் இளைஞர்கள் ஆவலுடன் இந்நிகழ்வில் பங்குபற்றி வருவதனை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது. 

யாழ்.தர்மினி