Showing posts with label world news. Show all posts
Showing posts with label world news. Show all posts

Wednesday, 26 July 2023

கனடாவின் அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக இலங்கைத் தமிழர்..!!!

கனடாவின் அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக இலங்கைத் தமிழர்..!!!


கனடாவில் ஆளும் லிபர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) கனடாவின் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது.

கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர் ஒருவர் அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் அரசு பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்காப்ரோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வரும் கெரி ஆனந்தசங்கரி, கடந்த 2015ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 7 June 2023

ஜப்பானியர்களுக்கு புன்னகை பயிற்சி வகுப்புகள்..!!!

ஜப்பானியர்களுக்கு புன்னகை பயிற்சி வகுப்புகள்..!!!


ஜப்பானிய குடிமக்கள் புன்னகைக்க கற்றுக்கொடுக்கும் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, ஜப்பானிய குடிமக்கள் கொவிட் தொற்றுநோய் காரணமாக முகமூடிகளை அணிந்திருந்தனர், மேலும் அந்த நேரத்தில் புன்னகைக்காததால் முக தசைகளில் ஏற்படும் எதிர்மறையான விளைவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த புன்னகை பயிற்சி வகுப்புகளுக்கான தேவை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, 31 March 2023

250 பேருடன் பயணித்த கப்பலில் திடீரென தீ விபத்து: 31 பேர் உயிரிழப்பு..!!!

250 பேருடன் பயணித்த கப்பலில் திடீரென தீ விபத்து: 31 பேர் உயிரிழப்பு..!!!


பிலிப்பைன்ஸில் சுமார் 250 பேருடன் பயணித்த கப்பல் ஒன்றில் திடீரென தீ ஏற்பட்டதில், குறைந்தது 31 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

MV லேடி மேரி ஜோய் 3 (MV Lady Mary Joy 3) என்ற இந்த கப்பலில் நேற்று முன்தினம் புதன்கிழமை (29-03-2023) இரவு உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்த கப்பல் ஜம்போங்கா மாகாணத்தில் இருந்து தென்மேற்கு திசையில் சுலு மாகாணத்தின் ஜோலோவிற்கு பயணித்தபோது இடம்பெற்றுள்ளது.

தீ ஏற்பட்டதையடுத்து, உயிர் தப்புவதற்காக நீரில் குதித்த சிலரும், தீக்காயங்களுக்கு உள்ளானவர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வளி சீராக்கி தொகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக கப்பலில் தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, 25 March 2023

அமெரிக்காவில் வீசிய சக்திவாய்ந்த புயலால் 24 பேர் பலி..!!!

அமெரிக்காவில் வீசிய சக்திவாய்ந்த புயலால் 24 பேர் பலி..!!!


அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிசிசிப்பியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சக்திவாய்ந்த புயலினால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் காரணமாக வீடுகளின் கூரைகள், சுற்றுப்புறங்கள் என்பன தரைமட்டமாகியுள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

மிசிசிப்பி மாநிலத்தின் சில்வர் சிட்டி மற்றும் ரோலிங் ஃபோர்க் நகரங்களே அனர்த்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Friday, 24 March 2023

கட்டாரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி ..!!!

கட்டாரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி ..!!!


கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார்.

கட்டாரின் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடமொன்று கடந்த புதன்கிழமை இடிந்து வீழ்ந்தது.

இந்த அனர்த்தத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

56 வயதான நிஷங்க சில்வா என்பவ​ரே உயிரிழந்துள்ளதுடன், 60 வயதான அப்துல் ரசாக் ஜமீல் என்பவர் காணாமல் போயுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விருவரும் கட்டாருக்கு தொழிலுக்காக சென்று குறித்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் 13,042 இலங்கையர்கள் கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது அங்கு தொழில் புரிந்து வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Saturday, 11 March 2023

மீண்டும் முடக்கலுக்கு தயாராகும் சீனா..!!!

மீண்டும் முடக்கலுக்கு தயாராகும் சீனா..!!!


சீன நகரமான சியானில் அண்மைய நாட்களில் காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் நகரம் முடக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் காய்ச்சல் பரவலானது நகரில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் சியான் பகுதிகளை முடக்கி, பாடசாலைகளையும் மூடும் நிலைமை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொவிட் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில சீனா முழுவதும் காய்ச்சலினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு பற்றக்குறை ஏற்பட்டுள்ளது.

சியானில் உடனடி முடக்கம் தொடர்பான பரிந்துரைகள் எதுவும் இல்லாத நிலையில் எதிர்வரும் நாட்களை அவதானித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படவுள்ளது.

Tuesday, 28 February 2023

கனடாவில் ரிக் ரொக் செயலிக்கு தடை..!!!

கனடாவில் ரிக் ரொக் செயலிக்கு தடை..!!!



சீன நாட்டின் ரிக் ரொக் (TikTok ) செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது.

குறித்த செயலியானது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்துவதாக கனேடிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் இந்த தீர்மானத்தால் தமது நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ரிக் ரொக் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இதேபோன்ற தடை அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் கனடா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Wednesday, 15 February 2023

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!!


நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

கேப்ரியல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்த நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த வாரம் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 40,000 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, 14 January 2023

கைலாசாவிற்கு அமெரிக்கா அங்கீகாரம்..!!!

கைலாசாவிற்கு அமெரிக்கா அங்கீகாரம்..!!!


கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் ‘இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்’ கையெழுத்திடும் விழா, கடந்த 11ஆம் திகதி நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் நெவார்க் நரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Wednesday, 28 December 2022

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் கைது...!!!

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் கைது...!!!


 

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர்.

அதில் ஒரு டிரக்கை சோதனை செய்த போது 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் அதில் இருந்துள்ளனர்

மற்றைய டிரக்கில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Thursday, 22 December 2022

வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் தடை..!!!

வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் தடை..!!!


பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமுலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதியாக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமுலில் உள்ளன.

இந்நிலையில், வடகொரியால் வசிக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங்-இல்லின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, டிசம்பர் 17ஆம் திகதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகாலமாக துக்க நாள்களில் இந்த தடை உத்தரவு அமுலில் இருப்பது பலரும் அறிந்ததே. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது. 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் மிகக் கொடுமையான தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

Friday, 16 December 2022

புகைபிடிப்பதை முழுமையாக தடை செய்ய தீர்மானம்..!!!

புகைபிடிப்பதை முழுமையாக தடை செய்ய தீர்மானம்..!!!


வருங்கால சந்ததியினருக்கு புகைபிடிப்பதை படிப்படியாக குறைக்க நியூசிலாந்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின்படி அடுத்த வருடம் முதல் நாட்டில் புகைப்பிடிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் புகைபிடிப்பதை முற்றிலுமாக தடை செய்வதே இறுதி இலக்கு. யார் சிகரெட் வாங்கலாம் என்பதில் சில கட்டுப்பாடுகளை விதித்து இந்த சட்டம் அமுல்படுத்தப்படும்.

அதன்படி, அடுத்த ஆண்டு 14 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்க தடை விதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வயது வரம்பு உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்த நாடு நியூசிலாந்து என்று கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடியும் என உதவி சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரல் தெரிவித்துள்ளார். மேலும் புகைபிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்கள் குறைவதால் சுகாதார அமைப்பால் நிறைய பணம் சேமிக்கப்படும் என்றார். இதன் மூலம் சுகாதார துறைக்கான செலவினங்களை சுமார் 5 பில்லியன் நியூசிலாந்து டொலர்கள் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் வாங்கக் கூடியவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டில் இருக்கக்கூடிய நிகோடின் அளவைக் குறைக்கவும் சட்டங்கள் போடப்பட்டுள்ளன. நிகோடின் சிகரெட்டுக்கு அடிமையாவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

மேலும் எதிர்காலத்தில், சிறப்பு கடைகளில் மட்டுமே இவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். வழக்கமான கடைகளில் அவற்றை வாங்க முடியாது.

சிகரெட் விற்கும் கடைகளின் எண்ணிக்கை சுமார் 6,000 என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இது 600 ஆக குறைக்கப்படும்.

ஏற்கனவே நியூசிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. வயது வந்தோரில் 8 சதவீதம் பேர் மட்டுமே தினமும் புகைபிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 9.4 சதவீதமாக இருந்தது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்களின் காரணமாக, 2025ஆம் ஆண்டுக்குள் இந்த சதவீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டங்களுக்கு எதிரான கட்சிகளும் உள்ளன.

இதன் காரணமாக சிகரெட்டுகளுக்கு கறுப்புச் சந்தை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாராளுமன்றத்தில் சில தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Friday, 18 November 2022

அதிக ஊழியர்கள் ராஜினாமா: டுவிட்டர் அலுவலகங்கள் உடனடியாக மூடப்பட்டன..!!!

அதிக ஊழியர்கள் ராஜினாமா: டுவிட்டர் அலுவலகங்கள் உடனடியாக மூடப்பட்டன..!!!


டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21 ஆம் திகதி வரை 2 வாரங்களுக்கு இந்த அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம் கடினமாக வேலை செய்ய வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு இணக்கம் தெரிவிக்கும் விசுவாச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 5 மணி வரை (இலங்கை, இந்திய நேரப்படி வெள்ளி காலை 3.30 மணிவரை) அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து பெரும் எண்ணிக்கையான ஊழியர்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், டுவிட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான இலோன் மஸ்க், கடந்த மாத இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

அதன்பின் உயர் அதிகாரிகள் பலரையும் பதவியிலிருந்து நீக்கிய அவர், அந்நிறுவனத்தின் 7500 ஊழியர்களில் அரைவாசிப் போரை வேலையிலிருந்து நீக்கினார். வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தையும் அவர் முடிவுக்கு கொண்டுவந்தார்.

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ‍செலவிடப்பட்ட பணத்தை ஈடுசெய்வதற்கு இலோன் மஸ்க் திணறி வருகிறார்,

Friday, 11 November 2022

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று ; 1,700 விமானங்கள் இரத்து..!!!

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று ; 1,700 விமானங்கள் இரத்து..!!!


கொவிட் தொற்று அதிகரித்து வருவதால் சீனா முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் தங்கள் பெரும்பாலான விமானங்களை இரத்து செய்துள்ளன.

தென் சீனப் பெருநகரமான குவாங்சோவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 1,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 700க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

சீனாவில் கொவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விமானங்கள் ரத்து, ஊரடங்கு, கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் வெகுஜன சோதனை போன்ற கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

நாட்டின் பூஜ்ஜிய-கொவிட்-19 கொள்கை இருந்தபோதிலும், அதன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 10,535 புதிய உள்நாட்டு தொற்றாரளர்கள் பதிவாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை ஏப்ரல் 29 க்குப் பிறகு ஏற்பட்ட தொற்றாளர்களின் அதிகரிப்பை காட்டுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,67,544 ஆக அதிகரித்துள்ளது.

குவாங்சோவைத் தவிர மற்ற முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷங்காய் மற்றும் சோங்கிங் போன்றவற்றிலும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை சமீபத்தில் மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, 16 October 2022

ரஷ்யா எல்லையில் வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்

ரஷ்யா எல்லையில் வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்


 உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. சில மாதங்களுக்கு பிறகு கிழக்கு உக்ரைன் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட சில நகரங்களில் தாக்குதல்களை ரஷ்யா குறைத்தது. இதற்கிடையே ரஷ்யாவின் கிரிமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா ஆவேச தாக்குதலில் ஈடுபட்டது.

உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன. நேற்று உக்ரைனில் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் போர் களத்தில் மீண்டும் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷியாவின் வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. 

Saturday, 15 October 2022

இனிமேல் பதிலடிதான்..? ரஷ்யாவை தாக்க தொடங்கிய உக்ரைன்..!!!

இனிமேல் பதிலடிதான்..? ரஷ்யாவை தாக்க தொடங்கிய உக்ரைன்..!!!




கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அதை அதிகாரப்பூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்துள்ளது.

சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசிய சம்பவம் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளானது. இவ்வளவு காலமாக உக்ரைன் தங்களது பிராந்தியத்தில் புகுந்த ரஷ்ய படைகள் மீது மட்டுமே போர் நடத்தி வந்தது.இந்த பிரச்சினைகளுக்கு பின்னர் தற்போது ரஷ்யாவுக்கு சொந்தமான பகுதியை தாக்கியுள்ளது உக்ரைன் ராணுவம்.

உக்ரைன் – ரஷ்ய எல்லையில் உள்ள ரஷ்யாவின் பிராந்தியமான பெல்கோராட் நகரம் மீது தாக்குதலை நடத்தியுள்ளது உக்ரைன். இதில் அந்நகரில் உள்ள துணை மின்நிலையம் தீப்பற்றியது. இதனால் அந்நகரில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.மேலும் உக்ரைன் ஏவுகணைகள் அப்பகுதியில் உள்ள ரயில் பாதைகள், பொதுவழி சாலைகளையும் தாக்கியுள்ளது. ரஷ்யாவின் பிராந்தியத்திற்குள் உக்ரைன் நடத்தியுள்ள இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்..!!!

மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்..!!!




நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் வெடிக்டோவ் எச்சரித்துள்ளார்.கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு பதிலடியாக, நேட்டோவில் தங்களை மிகத் துரிதமாக இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் அனுப்பியது வெறும் பிரசார உத்தியாகும்.

மற்றபடி, உண்மையிலேயே நேட்டோவில் இணையும் எண்ணத்தில் அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டிருக்காது. காரணம், நேட்டோவில் தங்களை இணைத்துக் கொண்டால் அது 3ம் உலகப் போர் மூள்வதற்குக் காரணமாக இருக்கும் என்பது உக்ரைனுக்கு மிக நன்றாகவே தெரியும்.இருந்தாலும், தங்கள் மீது பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக நேட்டோவில் இணையவிருப்பதாக உக்ரைன் உரக்கக் கூறுகிறது. உண்மையில், தற்போது உக்ரைன் அரசில் அங்கம் வகிக்கும் பலர், நிதா்சனத்தை உணராமல் கற்பனை உலகில் வாழ்கின்றனர்.

உக்ரைனை இணைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம்

அவா்கள் வேண்டுமானால் நேட்டோ தங்களை இணைத்துக்கொள்ளும் என்று நம்பலாம். உக்ரைன் போரில் பங்கேற்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வந்தாலும், ஆயுதங்கள் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்த நாடுகள் இந்தப் போரில் மறைமுகமாக அங்கம் வகிக்கின்றன.

இந்த நிலையில், உக்ரைனை தங்களது அமைப்பில் அந்த நாடுகள் இணைத்துக்கொண்டால், நேட்டோ விதிமுறையின் 5வது பிரிவின் கீழ் ரஷ்யாவுடன் அவை நேரடியாக மோத வேண்டியிருக்கும்.

அத்தகைய ஒரு அழிவுப் பாதையை அந்த நாடுகள் தேர்ந்தெடுக்காது. தங்களுடன் உக்ரைனை இணைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் என்பது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் நன்றாகவே தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tuesday, 4 October 2022

ஆப்கானில் தற்கொலைப் படைத்தாக்குதல்! பள்ளி மாணவர் உட்பட 53 பேர் உயிரிழப்பு..!!!

ஆப்கானில் தற்கொலைப் படைத்தாக்குதல்! பள்ளி மாணவர் உட்பட 53 பேர் உயிரிழப்பு..!!!




ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைப் படைத்தாக்குதலில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட் இ பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.இதில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும், 80க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், காபூல் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதன்படி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய வைரஸ் தொற்று..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய வைரஸ் தொற்று..!!!




உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா 2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா 2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ் தற்போதுள்ள எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் அறிவித்த நிலையில், இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Monday, 3 October 2022

கால்பந்து போட்டியில் தோல்வி!: ஆத்திரமடைந்த ரசிகர்களினால் ஏற்பட்ட வன்முறையில் 129பேர் உயிரிழப்பு..!!!

கால்பந்து போட்டியில் தோல்வி!: ஆத்திரமடைந்த ரசிகர்களினால் ஏற்பட்ட வன்முறையில் 129பேர் உயிரிழப்பு..!!!




இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இடம்பெற்ற கலவரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்ததாகவும், 180 பேர் காயமடைந்ததாகவும் இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஜாவா மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை இரவு போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் உள்ளூர் அணிகளான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன.

இந்த போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.தோல்வியடைந்த அரேமா அணியின் சொந்த மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெற்றது என்பதால், அந்த அணியின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.ரசிகர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் ஓட முயற்ச்சித்த வேளையில் கூட்ட நெரிசலில் சிக்கியும் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் பலர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு ஜாவா பொலிஸ் தலைமை அதிகாரி நிகோ அஃபின்டா இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில், 129 பேர் உயிரிழந்ததாகவும் , அவர்களில் இருவர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் 34 பேர் மைதானத்திற்குள் இறந்துள்ளனர். ஏனையோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஜாவாவின் மலாங் ரீஜென்சியில் நடந்த ஆட்டத்தில் பெர்செபயா சுரபயாவிடம் அரேமா 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டு ஜாவானீஸ் கிளப்புகளின் ரசிகர்களிடையே சண்டை ஏற்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில்,சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது என்று இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் (PSSI) தெரிவித்துள்ளது.

மேலும், இந்தோனேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சர் ஜைனுடின் அமலி, இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.