இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1370 ஆக அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர் இன்று (27) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 370ஆக  அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 51 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படைச் சிப்பாய்கள் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை 732 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

628 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here