Friday 26 April 2024

இன்றைய ராசிபலன் - 26.04.2024..!!!

இன்றைய ராசிபலன் - 26.04.2024..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலை எல்லாம் சுறுசுறுப்பாக முடியும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுக்கு உண்டான பதவி உயர்வும் தேடி வரும். வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து சென்றால் நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் அடம் பிடிக்கக் கூடாது. சில விஷயங்களை அடம்பிடித்து செய்வதன் மூலம் உங்களுக்குத்தான் இழப்புகள் ஏற்படும். பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்கவும். பெரிய அளவில் எந்த விஷயத்திலும் முதலீடு செய்யாதீர்கள். குறிப்பாக நண்பர்களுடைய பேச்சைக் கேட்டு இன்று எந்த பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது. யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. முன்பின் தெரியாத நபரை நம்பாதீங்க.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். மனைவி குழந்தைகளை பற்றிய சிந்தனை உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். குடும்பப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடி கொஞ்சம் சிரமப்படுவீர்கள். சில பேருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சில பேருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, இறைவனை பரிபூரணமாக நம்புங்கள். உங்களுக்கு இன்று நல்லது நடக்கும். இது தவிர உங்களுடைய வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும் பிரச்சனை இருக்காது.


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் இரட்டிப்பு வேலையாக இருக்கப் போகின்றது. ஒரு வேலையை செய்தோமா முடித்துவோமா என்று இல்லாமல், மீண்டும் மீண்டும் ஒரு வேலையை செய்யக்கூடிய சூழ்நிலை அமையும். இதனால் கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடிங்க. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு சந்தோஷத்தை கொடுக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். நீண்ட நாள் பிரிந்த நண்பர்களை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பிரிந்த காதல் ஒன்று சேரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. உற்சாகத்தோடு உங்களுடைய வேலையை செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்லது எதிர்பார்க்காத நல்லதும் நடக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மிகவும் நெருங்கிய உறவுகளோடு இன்றைக்கான நேரத்தை செலவு செய்வீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு பிடித்த நபராக இருக்கலாம், காதல் கைகூடும் கல்யாணம் வரை செல்லும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் ஒரு தெளிவு இருக்காது. எல்லா விஷயத்திலும் சின்ன பயம் இருக்கும். புதிய முயற்சிகளை இதனால் மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் இருக்கும். மாணவர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை இன்று செய்ய வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பாக்கெட் காலி. அனாவசிய ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நண்பர்களை எதிரிகளாக மாற வாய்ப்பு உள்ளது. கடனாக யாராவது பத்து ரூபாய் கேட்டாலும் அதை கொடுக்காதீங்க. நிச்சயம் திரும்பி வராது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனை தீர்த்து வைப்பதிலும் அக்கறை காட்டுவீர்கள். இதனால் புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். வாழ்க்கையில் உங்களுக்கு இன்று புது அனுபவங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபத்தை ஈட்டக்கூடிய நாளாக இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் முதல், பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் எல்லோருக்குமே இன்றைக்கான வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும். சந்தோஷமாக இந்த நாளை நகர்த்தி செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையை ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுடைய குழந்தைகளுக்கும் மனைவிகளுக்கும் பிடித்த பொருட்களை வாங்கி பரிசாக கொடுத்து சந்தோஷமாக இந்த நாளை நடத்தி செல்வீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. நிதானத்தோடு சிந்தித்து எல்லா வேலையையும் செய்ய வேண்டும். அனாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளை யோசிக்காமல் பேசாதீர்கள். குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தாய்மாமன் வழி உறவு, அம்மா சம்பந்தப்பட்ட உறவுகளோடு ஜாக்கிரதையாக இருக்கணும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸான நாளாக இருக்கப் போகின்றது. உங்களை பின் தொடர்ந்து வந்த டென்ஷன்கள் எல்லாம் குறையும். வேலை செய்யும் இடத்தில் பெருசாக பிரஷர் இருக்காது. பிரஷர் கொடுக்கும் அளவுக்கு நீங்க நடந்துக்கவும் மாட்டீங்க. எல்லா வேலையும் முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். கொஞ்சம் தாராளமாக செலவு பண்ணக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மன அமைதி இருக்கும்.

Thursday 25 April 2024

இரா சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பிய நாடாளுமன்றம்..!!!

இரா சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பிய நாடாளுமன்றம்..!!!


முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ள்ஸ் நிர்மலநாதன் தீர்மானத்தை ஆதரித்தார்.

91 வயதாகும் ஆர் சம்பந்தன் அவர்கள் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!!!

தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!!!


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜீன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகததால், திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜீன் 20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றதை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு..!!!

யாழில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு..!!!



யாழ். போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த ஜோன் திரவியம் குமரசேன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூளை காய்ச்சல் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 292.7078 ஆகவும் விற்பனை விலை ரூபா 302.5848 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,




கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு சீல் வைப்பு..!!!

கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு சீல் வைப்பு..!!!


யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான பிரயாண சீட்டு விற்பனை பணம் உள்ளிட்ட புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான சுமார் 20 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளமை கணக்காய்வில் தெரிய வந்துள்ளமையால் , பொறுப்பதிகாரிக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் புகையிரத நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் , பிரயாண சீட்டினை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் , காட்சிப்படுத்தப்பட்ட , நிலைய அலுவலக கதவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் புகையிரத நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமையால் கொக்குவில் , திருநெல்வேலி பகுதி மக்களும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் , திறந்த பல்கலைக்கழகம் , தொழிநுட்ப கல்லூரி , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர்கள் என பெரும்பாலானோர் புகையிரத பயணங்களை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


க. பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு..!!!

க. பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு..!!!



நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மே 6 முதல் 15ம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெற உள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பொதுச் சான்றிதழ் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.