யாழ்ப்பாணம் புலோலி அ.மி.த.க பாடசாலையில் இருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வழமை போன்று நேற்று இரவு கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news