நாடுமுழுவதும் சனியன்று தபாலகங்கள் பூட்டு


நாடுமுழுவதும் தபாலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது.

நாளையும் நாளைமறுதினமும் பொது விடுமுறை என்ற அடிப்படையில் மறுநாள் சனிக்கிழமை தபாலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் திறக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here