நல்லை ஆதின முதல்வருடன் முன்னணி வேட்பாளர்கள் சந்திப்பு..!!!


நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்கள் சந்தித்து கலந்துரையாடியதுடன், ஆசியையும் பெற்றனர்.

இந்தச் சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனும் பங்கேற்றார்.

நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பங்கேற்றனர்
Previous Post Next Post


Put your ad code here