யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகம்..!!!


கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், நடப்பு வாரம் விலை உயர்வுடனே தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஒரு லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கோரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 910 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 கரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Previous Post Next Post


Put your ad code here