உலக நாடுகள் 2020 ஆம் ஆண்டில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. கொரோனா தொற்றின் தீவிரம் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள காட்டு தீ. இந்நிலையில் உலகின் மிகவும் சூடான மாதமாக நடப்பு மாதமான செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் பூமி கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் நடப்பு மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் அதிகமாக இருப்பதோடு, சைபீரிய பகுதில் வெப்ப நிலை உயர்ந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோனிய மற்றும் ஆஸ்திரேலிய காட்டு தீயே இந்த வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
Tags:
world news