சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்..!!!


இந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தலின் படி பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்கு 3 லட்சத்து 31 ஆயிரத்து 694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 72 மாணவர்கள் சிங்கள மொழிமூலமும், 83 ஆயிரத்து 622 மாணவர்கள் தமிழ்மொழிமூலமும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இதேவேளை, கோவிட் -19 தொற்று நோய் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பரீட்சைக்கு அமர தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here