ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் விடுதிகளில் உள்ள மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 50 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன், பானாந்துறையில் உள்ள அவரது வீட்டிலிருந்து கடந்த 4ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார்.
இன்று அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சக மாணவர்களும் அவரது நண்பர்களும் நாளை பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
தற்போது முகாமைத்துவ பீடத்தின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேற வேண்டாம் என்று துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ளதாக பொது மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news