யாழ்.வல்வெட்டித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 30 மீனவர்களுக்கு இன்று காலை வல்வெட்டித்துறை ஆலடி கடற்கரையில் உள்ள உதய சூரியன் சனசமூக நிலையத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்களும் இராணுவத்தினரும் இணைந்து பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இந்திய மீனவர்களும் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் அதிகமாக அட்டை பிடித்தலுக்காக இந்த இடத்திற்கு வருகை தரும் நிலையில் முன்னாயத்த ஏற்பாடாக குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனை நடைபெறும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.