கேகாலையில் 4 பிரதேசங்கள் முடக்கம்..!!!
கேகாலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹேமதகம, மாவனல்ல, புலத்கோஹுபிட்டி பொலிஸ் பிரிவுகள் மற்றும் கலிகமுவ பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் கிரியுல்ல பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் கோரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.