நாட்டை முழுமையாக 7 நாட்கள் முடக்க பேசினோம்; இராணுவ தளபதி..!!!
நாட்டை முழுமையாக 7 நாட்களுக்கு முடக்கம் செய்ய பேச்சு நடத்தியதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இருப்பினும் மக்களின் அன்றாட ஜீவனோபாயம், வர்த்தக செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்பதால் முடிவை மாற்றிக்கொண்டதாக அவர் கூறினார்.
21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பரவியுள்ளனர். இதனால் முழுமையாக நாட்டை முடக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் மக்கள் சார்பாக ஜனாதிபதி சிந்தித்தால் முடிவை மாற்றிக்கொண்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.