இரு குடும்பங்களுக்கிடையே முரண்பாடு ; இருவர் படுகொலை - யாழில் சம்பவம்..!!!


யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த  சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்றைய தினமும் வாய்த்தர்க்கமான மாறியது.

பின்னர் மாலை வேளையில் இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறும் சூழ்நிலை காணப்பட்டபோது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்.

பின்னர், நேற்று இரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதில்  சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31) சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here