புரவியால் 142 படகுகள் சேதம்..!!!


புரவி புயலால் யாழ்.மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுகள் கடல் நீர் தடுப்பணை மற்றும் நங்கூரமிடும் வசதிகள் இன்மை காரணமாகவே இவ்வாறு சேதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நங்கூரமிடும் மற்றும் தடுப்பணை ஆகியன அமைத்துத்தருமாறு நாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இரண்டு புயல் காற்று காலத்திலும் எமது மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எமக்கான நிவாரணம் எதுவும் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

Previous Post Next Post


Put your ad code here