பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தும் சந்தர்ப்பங்களில் போலி தகவல்களை வழங்கும் நபர்கள் மற்றும் பரிசோதனைகளை தவிர்க்கும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
குறித்த நபர்கள் நாட்டிற்கு துரோகம் இழைக்கின்றவர் எனவும், மற்றுமொரு நபருக்கு வைரஸை பரப்பும் வகையில் செயற்பட்டவர் எனவும் கருதி, அவரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தும் சந்தர்ப்பங்களில் சிலர் போலியான தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட் வைரஸை, நாட்டிலிருந்து இல்லாது செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்
Tags:
sri lanka news