இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்..!!!


இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான நான்கு நாள் விஜயமொன்றை இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே அவர்கள்2021 மார்ச்11ஆம்திகதி ஆரம்பித்தார்.
அருட்கடாட்சம் நிறைந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்துகொண்டதன் மூலம் அவர் இந்த விஜயத்தினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதன் பின்னர் இந்திய அரசாங்கத்தால் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப்பணிகளை உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இந்ததிட்டமானது326 மில்லியன் இலங்கை ரூபா நன்கொடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 2. பல நூற்றாண்டுகளாக இந்தியா - இலங்கையை இணைக்கும் பாலமான ராம் சேது (ஆதாம் பாலம்)பகுதியிலும் அன்றையதினம் உயர்ஸ்தானிகர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்.

3. மன்னார் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ மற்றும்
 பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் இகேகாதர்மஸ்தான் இகுலசிங்கம் திலீபன் ஆகியோரின் பிரசன்னத்திற்கு மத்தியில் மன்னார் புனிதமடு மாதாஆலயத்தில் யாத்திரிகர்களுக்கான144 இடைத்தங்கல் வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லினை, சுற்றுலாத்துறை அமைச்சர்
 பிரசன்னரணதுங்க அவர்களுடன் இணைந்து உயர்ஸ்தானிகர் அவர்கள் நாட்டி வைத்தார். இந்த வீட்டு அலகுகள் இந்தியாவினால் வழங்கப்படும் 300 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன.

4. வடமாகாண ஆளுநர்  பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாகாணத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதிய போசன சந்திப்பிலும் உயர்ஸ்தானிகர் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். கல்வி, ஆளுமை விருத்தி,சுகாதாரம், விவசாயம், நீர் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் ஆழமான ஈடுபாடு குறித்து அவர்கள் பரந்தளவிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

5.  யாழ்ப்பாணத்துக்கான இந்திய கொன்சூல் ஜெனரல் திரு எஸ் பாலச்சந்திரன் அவர்களால் உயர்ஸ்தானிகரைக்கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசனவிருந்துபசாரம் ஒன்றிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.இதன்போது அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்டதுறைகளைச் சேர்ந்த முன்னணி பிரமுகர்களுடன் உயர்ஸ்தானிகர் சம்பாஷணையினை மேற்கொண்டிருந்தார். இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதிகளவான முதலீடுகள் போன்றவற்றினூடாக வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக இராப்போசன விருந்துபசாரத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடல்களில் கவனஞ்செலுத்தப்பட்டது. வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, கைத்தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டிருந்தமைக்கான வரலாற்றினை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.


 


Previous Post Next Post


Put your ad code here