ஜுலை முதலாம் திகதி முதல் புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் – பிறப்பு முதல் இறப்பு வரை கணினிமயம்..!!!


எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் பிறக்கின்ற அனைவருக்கும் புதிய தேசிய பிறப்புச்சான்றிதழை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட் பதிவு திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு நபரினதும், பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து தகவல்களையும் கணினிமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகர தெரிவிக்கின்றார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பிறப்புச்சான்றிதழ் நடைமுறையை இல்லாது செய்து, புதிய தேசிய பிறப்புச்சான்றிதழ் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகர தெரிவிக்கின்றார்.
Previous Post Next Post


Put your ad code here