யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியவர் உயிரிழந்துள்ளார்.
யாழில் உள்ள பிரபல தனியார் விடுதியொன்றில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமண வரவேற்பு விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உணவருந்திய பின்னர் வீடு திரும்பிய நிலையில் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அதனை அடுத்து வீட்டார் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்