வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு யாகசாலையில் சிறப்பு யாக வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஆலயக் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் அருளைப் பெற்றார்கள்.