யாழில் வெவ்வேறு இடங்களில் 218 கிலோ கஞ்சா மீட்பு ; 20 வயது இளைஞன் கைது..!!!


கஞ்சா போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்பசிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
 
சந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் கைப்பற்றப்பட்டது.
 
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
 
அதேவேளை யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 183 கிலோ கிராம் கேரள கஞ்சா  கடற்படையினரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
 
சந்தேகத்திற்கிடமான பொதிகள் கடலில் மிதந்து வந்தவேளை அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் 183 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here