மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவன் விமலரட்ணம் தமிழ்மாறனுக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள நியூ லலிதா நகை மாளிகை மோதிரம் வழங்கி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களது முன்மாதிரியான இந்த செயற்பாட்டின் மூலம் கற்றல் செயற்பாட்டிற்கு ஆதரவாக மட்டுமன்றி ஏனைய மாணவர்களையும் ஊக்கமளிக்கும் என்று மாணவரது உறவினர்கள் குறிப்பிட்டனர்.
நேற்றைய தினம் வெளியாகிய கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் தொழில்நுட்ப பாடப்பிரிவில் மேற்படி மாணவன் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.