கொடிகாமத்தில் ஒருவர் கொரோனாவால் மரணம்..!!!


யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியில் கொரோனாத் தொற்றுக் காரணமாக 68 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடைய மகள் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நிலையில் அவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here