யாழில். வீசும் காற்றினால் 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேர் பாதிப்பு..!!!


யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர்  என்.சூரியராஜா  தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

 யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடுஇதில்  சிறுமி ஒருவர் காயமடைந்து  சிகிச்சை பெற்று வருகின்றார் கடுங்காற்றின்  தாக்கத்தின் காரணமாக வேலணை பிரதேசத்தில்  இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு
ஏனைய பிரதேச செயலர் பிரிவில் 60வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்  சிறு தொழில்  முயற்சியாளர்கள் ஒன்பது பேர்  காற்றின்  தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்
 
குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும்  பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த  முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  காற்றுடன் கூடிய காலநிலையினால் அதிகளவு  பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here