இந்தியாவில் 3 இலட்சம் பேரை பலியெடுத்தது கொரோனா வைரஸ்..!!!


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை இன்று 3 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று காலை வரையான 24 மணிநேரங்களில் 3,741 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 3 இலட்சம் மரணங்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா கடந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் குறைந்த காலப்பகுதியில் இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

உலகில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்ததாக அதிக கொரோனா மரணங்கள் பதிவான நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்கா 5 இலட்சத்து 89 ஆயிரத்து 703 உயிரிழப்புகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 4 இலட்சத்து 48 ஆயிரத்து 208 இறப்புகளுடன் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் இன்று 3 இலட்சத்து 3 ஆயிரத்து 751 ஆக பதிவாகியுள்ளன.

இதேவேளை, இந்தியாவின் கொரோனா மரணங்கள் உத்தியோகபூா்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பல கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் இந்தியாவில் 240,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவற்றுடன் மொத்த தொற்று நோயாளர் தொகை 2 கோடியே 67 இலட்சத்து 51 ஆயிரத்து 681-ஆக உயர்ந்துள்ளது. இவா்களில் 1 கோடியே 48 இலட்சத்து 58 ஆயிரத்து 1,009 பேர் குணமடைந்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here