நாட்டை முடக்குவதால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையாது - GMOA குற்றச்சாட்டு..!!!


இலங்கையில் வீடுகளில் நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவை தோல்வியடைந்தமை, சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கத் தவறியமையே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட காரணம் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக கொவிட் நிமோனியா நிலைமை அதிகரித்து நோயாளிகள் வீடுகள், வீதிகள், வைத்தியசாலைகளில் அனுமதித்தவுடன் உயிரிழப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டியமை, அறிகுறிகள் உள்ள நோயாளிகளை தவறவிட்டமை உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டை முடக்குவதன் மூலமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால் வேலைத்திட்டம் ஒன்றை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here