யாழ்ப்பாணத்தில் 152 பேர் உட்பட வடக்கில் 213 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணத்தில் 152 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று மொத்தம் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் -152, முல்லைத்தீவு -23, வவுனியா – 22, கிளிநொச்சி -13 மற்றும் மன்னாரில் 03 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 164 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.

மட்டக்களப்பு -74, அம்பாறை – 68 மற்றும் திருகோணமலையில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கம்பஹா மாவட்டத்தில் நேற்று மிக அதிகளவான 1,004 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொழும்பு -501, களுத்துறை -110, காலி -120, குருநாகலை -113, கேகாலை -105, அனுராதபுரம் -137, மாத்தறை – 167, இரத்தினபுரி 122 மற்றும் பதுளையில் 251 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏனைய மாவட்டங்களில் இரட்டை மற்றும் ஒற்றை இலக்க தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்,

நேற்று நாட்டில் மொத்தம் 3,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவற்றுடன் மொத்த தொற்று நோயாளர் தொகை 192,546 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 39 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகின. இவற்றுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழைந்தவர்களின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 

Previous Post Next Post


Put your ad code here