இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி- கரணவாய் கிராம அலுவலகர் பிரிவும் மன்னாரில் தலைமன்னார் – பியர் கிழக்கு, மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

பதுளை, மன்னார், யாழ்ப்பாணம் களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி தொடக்கம் 10 கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தின்- கரவெட்டி பொலிஸ் பிரிவு

  • கரணவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவு

மன்னார் மாவட்டம்- தலைமன்னார் பொலிஸ் பிரிவு

  • தலைமன்னார் பியர் மேற்கு
  • தலைமன்னார் பியர் கிழக்கு
  • கிராம உத்தியோகத்தர் பிரிவு

பதுளை மாவட்டம்-வெலிமடை பொலிஸ் பிரிவு

  • ஹூலங்கபொல கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்-பெல்மடுல்ல பொலிஸ் பிரிவு

  • பொத்தகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • நொரகல்லவத்த மேல் பிரிவு
  • பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • பெல்மடுல்ல தோட்டத்தின் முதலாம் பிரிவு
  • பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு
  • கபுஹென்தொட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு

களுத்துறை மாவட்டம்-மத்துகம பொலிஸ் பிரிவு

  • யட்டதொல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • அம்பத்தென்னவத்த பிரதான பிரிவு
  • க்ளே பிரிவு

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் 233 ஆம் இலக்க தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post


Put your ad code here