யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி- கரணவாய் கிராம அலுவலகர் பிரிவும் மன்னாரில் தலைமன்னார் – பியர் கிழக்கு, மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
பதுளை, மன்னார், யாழ்ப்பாணம் களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி தொடக்கம் 10 கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தின்- கரவெட்டி பொலிஸ் பிரிவு
- கரணவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவு
மன்னார் மாவட்டம்- தலைமன்னார் பொலிஸ் பிரிவு
- தலைமன்னார் பியர் மேற்கு
- தலைமன்னார் பியர் கிழக்கு
- கிராம உத்தியோகத்தர் பிரிவு
பதுளை மாவட்டம்-வெலிமடை பொலிஸ் பிரிவு
- ஹூலங்கபொல கிராம உத்தியோகத்தர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்-பெல்மடுல்ல பொலிஸ் பிரிவு
- பொத்தகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
- நொரகல்லவத்த மேல் பிரிவு
- பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு
- பெல்மடுல்ல தோட்டத்தின் முதலாம் பிரிவு
- பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு
- பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு
- கபுஹென்தொட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
- பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு
களுத்துறை மாவட்டம்-மத்துகம பொலிஸ் பிரிவு
- யட்டதொல கிராம உத்தியோகத்தர் பிரிவு
- அம்பத்தென்னவத்த பிரதான பிரிவு
- க்ளே பிரிவு
இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் 233 ஆம் இலக்க தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
