தென்னிலங்கையில் 10 மாவட்டங்களைப் பாதித்த வெள்ள இடரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 5 பேர் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, புத்தளம், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 52 ஆயிரத்து 212 பேர் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. மேலும் 817 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரேலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 5.30 மணி வரை நடைமுறையில் உள்ளது.
Tags:
sri lanka news