3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி..!!!


சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனமான சைனோவெக் உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு சைனோவெக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை 2 கட்டங்களாக 3-17 வயதுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு செலுத்தி சைனோவேக் நிறுவனம் பரிசோதித்துள்ளது. இதன் போது சினோவெக் தடுப்பூசி செயல்திறன் மிக்கது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த 1ஆம் திகதி சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2-வது தடுப்பூசியான சைனோவெக்கிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனா 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டிற்கான தனது ஒப்புதலை அளித்துள்ளது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க அமைக்கப்பட்டுள்ள கோவெக்ஸ் அமைப்பின் திட்டத்துக்காக சீனா 1 கோடி தடுப்பூசி வழங்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here