பழைய இரும்பு சேகரித்தல் என்ற போர்வையில் திரியும் திருட்டு கும்பல்..!!!



 

நீர்வேலியில் வீட்டிற்கு பழைய இரும்பு சேகரிக்கும் கும்பல் ஒன்று படி ரக வாகனத்தில் வந்த 4 பேர் வீட்டில் இருந்த மரத்திலான சிற்பவேலை செய்யப்பட்ட மேசையொன்றினை எடுத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீட்டில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் விறாந்தையில் இருந்த மரத்தாலான சிற்ப வேலைகள் செய்த மேசையினை தூக்கிச்சென்றுள்ளனர் இதன் பெறுமதி கிட்டத்தட்ட 25 ஆயிரம் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.

தூக்கி ஓடுவதை அவதானித்த அயலவர் தடுக்க செல்லும் போது அவரை உதைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்களின் வாகன இலக்கம் NP PP 2707 இது குறித்து உடனடியாக பொலிஸ் அவசர தொலைபேசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோப்பாய் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here