நல்லூர் திருவிழா உள்வீதியில் - 100 பேருக்கே அனுமதி..!!!


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வருட ஆலய உற்சவத்தினை திறம்பட செயற் படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Previous Post Next Post


Put your ad code here