கிளிநொச்சியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு..!!!



கிளிநொச்சி- முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



Previous Post Next Post


Put your ad code here